ஈகோ

ஈகோ

சிறந்த குரு ஆரம்ப நிலையிலேயே நமது அகந்தையை அடித்து நொறுக்கி விடுகிறான்.இதுவொரு நல்ல நிலை.நமது அகந்தை அடிபட்டு விடாமல் காக்கும் நிலைக்குப் பெயரே அகங்காரம்.குரு இதில் முதலில் வலிமையான  பங்களிப்பைச் செய்து விடும்போது,நிறைய காலம் நமக்கு மீதமாகிறது . இல்லையெனில் வாழ்க்கை அகந்தையை அடித்து நொறுக்கும்.அப்போது நிறைய வலிவுணரவை அடைய வேண்டியதிருக்கும்.தன் அகங்காரத்துடன் வாழ்க்கையில் நடப்பதற்கு வாய்ப்பே கிடையாது.அது எங்கேனும் முட்டுச்சந்தில் போய் நிறுத்தி முட்டி நிற்கும்.ஒரு மனிதனுக்கு அகங்காரம் உடைந்த பின்னர் ஏற்படுவதே விழிப்புணர்ச்சி.

இப்போது பல இளைஞர்கள் தங்கள் அகந்தை உடைபட்டு விடக் கூடாது
என்று : மலினமான , தங்களிலும் தாழ்ந்த இடங்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு நிற்கிறார்கள்.அகந்தை எங்கு நோக்கிக் கண் திறந்தால் உடைந்து விழுமோ ,அந்த இடங்களை தாழ்ந்த அடையாளங்களில் நின்ற வண்ணம் தாக்கத் தொடங்குகிறார்கள்.இது மிகவும் ஏழ்மை நிலை.பரிதாபகரமானது.எது உங்களை உடைத்து நொறுக்குமோ அதை நோக்கி சென்று கொண்டிருக்க வேண்டும்.பாதை அந்த திசையிலேயே இருக்கிறது.

என்னுடைய இளமைக் காலங்கள் முழுதும் என்னை யார் அடித்து நொறுக்குவார்கள் என்று தோன்றுமோ அவர்களை நோக்கியே இருந்தது.அவர்களைத் தேடித் சென்று அடிவாங்கி பின் திரும்புவேன்.அப்படியடி வாங்கி வாங்கியே அது கொடுத்த வளத்தில் எனது வாழ்க்கை அமைந்திருக்கிறது.இல்லையெனில் இவ்வளவு காலம் என்னை போன்ற ஒருவன் உயிர் வாழ்வதற்கு ஒன்றுமே கிடையாது.

அகந்தை நொறுங்கி விடக் கூடாது என்று எவ்வளவு தூரத்திற்கு மூடி மூடி பாதுகாத்து நடக்கிறீர்களோ அதுவரையில் பெரிய கால தாமதத்தை நீங்கள் தேடித் கொள்கிறீர்கள் என்பதே உண்மை.ஆனால் நாம் அகந்தையை அழிப்பவரை நெருங்க அஞ்சுகிறோம்.அவரை ,அத்தகையவற்றை தாக்கி அழித்து விட அகந்தையால் விரும்புகிறோம் .அப்படி முயன்று கொண்டே சென்றால் கண்டடைவதற்குள் புருவம் நரைத்து விடும் .அகந்தை உடைந்து விடாமல் நடந்து செல்வதற்குரிய பாதைகள் ஏதும் உலகில் கிடையாது.

அகந்தையை உடைத்து உடைத்து விளையாடுங்கள்.அதுதான் விளையாட்டே .
அகங்காரம் விழிப்படைய அது ஒன்றே வழி. 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"