இரணியல் அரண்மனையை எழுத்தாளர்கள்,கலைஞர்களுக்கான இல்லமாக மாற்றுங்கள்

இரணியல் அரண்மனையை எழுத்தாளர்கள்,கலைஞர்களுக்கான இல்லமாக மாற்றுங்கள்.

சில தினங்களுக்கு முன்பு நானும் சூர்யாவும் மண்டைக்காடு பகவதியைப் பார்த்து விட்டு இரணியல் அரண்மனைக்குச் சென்றோம்.மழைச் சாரல். அரண்மனையின் சிதிலம் பேயாக முகத்தில் அறைந்தது.எவ்வளவோ பேர் இது குறித்து பேசியிருக்கிறார்கள்.இவ்வளவு சிதைவடைவதற்கு முன்னரே இதழ்கள் இது பற்றி எழுதியிருக்கின்றன.

சுமார் நான்கு கோடி ரூபாய் புனரமைப்பதற்காக ஜெயலலிதா 2014  ல்  நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்.இதுவரையில் எந்த பணியும் தொடங்கப்படவில்லை.மட்டுமல்ல இப்போதைய நிலையில் அதனைப் புனரமைப்பது இயலாது .எல்லாமே முடிந்து கிடக்கிறது இரணியல் அரண்மனை.சிதிலத்தை அகற்றி எழுத்தாளர்கள்,கலைஞர்களுக்கான ஒரு இல்லமாக அதனை மாற்றலாம்.இந்த அரண்மனைக்கு இதுவரையில் எல்லோரும் கூட்டு சேர்ந்து செய்துள்ள  அநீதிக்கு அது பரிகாரமாக அமையும்.ஆனால் யார் செய்வார்கள் இதனை ?

கேரளா அரசுக்கு இந்த அரண்மனையின் பேரிலும் ஆரம்பத்தில் ஆர்வம் இருந்தது.இப்போதைய நிலையை காணும்போது தமிழ்நாடு அவர்களுக்கு இதனை விட்டுத் தந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.அவர்கள் நிச்சயமாக பொலிவு படுத்தியிருப்பார்கள்.அந்த அரண்மனையின் சிதைவு நம் மனம் அடைந்துள்ள சிதைவோடு ஒப்பிடும் படியானதுதான்.நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி பட்டினி போட்டு கொல்வதற்கு   நிகரானது ,இந்த அரண்மனைக்கு தமிழ்நாடு செய்திருக்கும் துரோகம்.

கோடிக்கணக்கில் மதிப்புள்ள தேக்கு உத்திரங்கள் விறகுக் கட்டைகளை போன்று எலும்பு தள்ளி நிற்கின்றன.

எனக்கு உள்ளே செல்லவே பயமாக இருந்தது.காலத்தின் பேரில் நமக்குள்ள இளக்காரம் ஒரு மமதை என்பதனின்றி வேறில்லை.கால பைரவன் மீதான  அலட்சியம் அது .துயரம்.

தற்போது   இந்த பழுது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் பொறுப்பில் உள்ளது.என்னைக் குற்றுயிருடன் வதைத்துக் கொல்வதற்காகத் தான் ,என்னை பொறுப்பில் வைத்துக் கொண்டிருந்தீர்களா ? என்று இந்த அரண்மனை கேட்பது போலிருக்கிறது இப்போது.கேள்வி யாருடைய செவியேனும் சென்றடையுமா ?

ஊழ்  .மீண்டு வரும் ஊழ்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்