ஆத்மாநாம் விருதென்னும் மதிப்பீட்டின் பாவனை

ஆத்மாநாம் விருதென்னும் மதிப்பீட்டின் பாவனை

இலக்கிய மதிப்பீடுகளை உள்ளடக்கமாகக் கொண்டிராத விருதுகள் உண்டு.ரோட்டரி பிரமுகர்களாகும் லட்சியத்தை உள்ளடக்கமாகக் கொண்டவை அவை.உலகத்திற்கு உலகம் ஊருக்கு ஊர் என்று காலங்காலமாக இருப்பவை அவை.அவற்றிற்கும்  மதிப்பீடுகளுக்கும் தொடர்புகள் கிடையாது.அதனாலேயே அவற்றால் பெரும் ஆபத்துக்கள் இருப்பதில்லை.ஆத்மாநாம் போன்ற விருதுகளுக்கும் இலக்கிய மதிப்பீடுகள் அடிப்படை இல்லையென்றாலும் கூட நிறுவன அதிகாரங்களிலிருந்தும் , அதன் அடிமைகளிடமிருந்தும் ஊதி பெருத்து வருகிற இத்தகைய விருதுகள் பின்னாட்களில் ஏராளமான நிறுவன அடிமைகளை உருவாக்கித் தருபவை என்கிற அடிப்படையில் மாசு உண்டாக்குபவை.

அனார் ,சச்சுதானந்தன் ,ஏன் ஆத்மா நாம் என்கிற பெயர் உட்பட அனைத்தும் இத்தகைய நிறுவனங்களுக்கு துருப்புச் சீட்டுகள்தாம் .நோக்கம் வேறு வகையானது.இலக்கிய விருதுகளில் நோக்கம் பிறிதொன்றாக இலக்கியத்திற்குத் தொடர்பற்றதாக இருக்குமெனில் அவை தீங்கின் கரங்களில் தவள்பவை என்று அர்த்தம்.இத்தகைய விருதுகள் உருவாக்கித் தருகிற நிறுவன அங்கீகாரங்கள் சூழலின் மீது பயத்தினை ஏற்படுத்துபவை.சூழலின் மீது இவை ஏற்றுகிற பய உணர்வு ஏராளமான இலக்கிய நிறுவன  அடிமைகளை பிரசவிக்கும் வல்லமை பொருந்தியது.

அதன் காரணமாகவே இத்தகைய விளையாட்டுகளில் தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பவர்கள் விடுபட்டு விடுகிறார்கள்.கலா ப்ரியா ,சுகுமாரன் போன்ற எண்பதுகளின் நடிகர்கள் கச்சிதமாக பொருந்துகிறார்கள்.இமையம் அதிகார மடங்களின் குறியீட்டுப் பெயர்.சுகுமாரன் தனது வாழ்நாள் முழுவதையுமே அதிகார நிறுவனங்களின் வாயிற்காவலனாக ஒப்படைப்பு செய்திருப்பவர்.கலா ப்ரியா  நிறுவன அதிகாரங்களின் அடிப்பொறுக்கி.இது அவர்கள் விதி.சமகால கவிதையின் இயங்கு தளத்தில் உள்ளவர்களும் அல்லர்.பின்னர் ஏன் இது போன்ற இடங்களில் இவர்கள்   முதன்மை பெறுகிறார்கள் ?

மதிப்பீடுகளுக்கு புறம்பான காரியங்களை எதன் பொருட்டும் துணியக் கூடியவர்கள் இவர்கள் என்பதுதான் இவர்களின் அடிப்படை தகுதி.இந்த துணிச்சலை காரணமாக வைத்துதான் நிறுவனங்கள் இவர்களுடைய அடிமை விசுவாசத்தை ஆராதனை செய்கின்றன.இதுவே முதல் படி.என்னைப் போன்ற கவிஞர்கள் பத்துப் பதினைந்து பேர் இந்த சூழலில் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கிறார்கள் .இவர்கள் ஒருவரின் தடயம் கூட இல்லாத வண்ணம் , ஏற்பற்ற வண்ணம் சம காலத்தில் ஒரு இலக்கிய மதிப்பீடு இருக்க முடியுமா என்ன ? என்னைப் பொறுத்தவரையில் கலா ப்ரியா ,சுகுமாரன் என்ற இரண்டு விஷ பயிர்களுக்கு மாற்றாக அந்த இடத்தில் விக்ரமாதித்யன் இடம்பெறுவாரேயாயினும் கூட பொறுத்துக் கொள்வேன்.காரணம் அவரால் கவிதையை பொறுத்த மட்டில் வஞ்சனைகள் செய்ய இயலாது.

அப்படியானால் அனார் விருதுக்கு பொருத்தமற்றவரா ? என்று  விசயங்கள் விளங்காதது போல பாவனை செய்து எவரேனும் கேட்பாரேயாயின் , அனார் நிச்சயம் விருதுக்கு பொருத்தமானவர் என்றுதான் சொல்வேன்.மிகச் சிறிய உலகத்தை கைகளில் வைத்து உருட்டிப் பார்க்கத் தெரிந்த ஒரு சாதாரண கவி அவர்.ஆனால் அதுவல்ல அவர் இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்   பட்டிருப்பதற்கான பிரதானமான காரணம்.கவிதையில் உள்ள தேர்ச்சியை காட்டிலும் அவருக்கு நிறுவனங்களுடன் அதிகாரத்திற்கு இடர்பாடு ஏற்படுத்தாதவாறு பொருத்துவதன் தொழில் நுட்பம் தெரியும்.அது கச்சிதமாக கைவரப்பெற்றவர் அவர் என்பதுதான் மகா சூட்சுமம்.

பத்து அனாரை நிறுவனங்கள் கண்டடைந்து விடுமானால் நூறு நிறுவன அடிமைகள் கிடைப்பார்கள் என்பது இவர்கள் அறியாததா என்ன ? 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"