ஐரோம் ஷர்மிளா நீங்கள் தமிழ்நாட்டின் கூடுதல் கவர்னர் அல்ல.

ஐரோம் ஷர்மிளா நீங்கள்  தமிழ்நாட்டின் கூடுதல் கவர்னர் அல்ல.

ஐரோம் ஷர்மிளாவின் திருமணம் இங்கே பிரச்சனையாகவில்லை.அவர் இந்தியாவின் எந்த இடத்திலும் தனது அமைதியான வாழ்க்கையைத் தொடரமுடியும் .இந்த போராளிகள் எங்கு சென்றாலும் தங்கள் விதியின் சுருளையும் எடுத்துக் கொண்டுதான் செல்கிறார்கள் .அதுதான் பிரச்சனையே.அவர்கள் கொண்டிருக்கும் தன் முனைப்பின் இருள் அவர்களை சும்மா இருக்க விடுவதில்லை.கொடைக்கானலிலும் ஒரு போர்ச் சூழலை ஏற்படுத்துவேன் என அவர்கள் சபதமேற்பதுதான் சிக்கலாகிவிடுகிறது. இயல்பான வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துவேன் என்கிற விதத்தில் ஊடகங்களில் இவர்கள்  ஏற்படுத்துகிற அச்சமே சிக்கலுக்கு காரணம்.மக்கள் இவற்றை ஏற்பதில்லை. பிரபலமான ஒரு மனிதர் தான் செல்கிற இடமெங்கும் தன் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவேன் என கோசமிட்டுக் கொண்டே சென்றால் என்னவாகும் ?

இந்த போராளி மனோபாவத்தின் சிக்கலான அம்சம் ,தங்களை சாமானியர்கள்  இல்லை என கருதுவதிலிருந்து தொடங்குகிறது.அவர்கள் எப்போதும் தங்களை குட்டி சாம்ராஜ்யத்தின் எஜமானர்கள் என கருதுவதிலிருந்து தொடங்குகிறது.பல போராளிகளின் உளப்பாங்கு இதுதான்.நிலவுடைமையின் சாராம்ச மன உறுப்புகள் இவர்கள்  . குட்டி சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பாமல் அவர்களால் உயிர் வாழ்தல்  இயலாது. இப்படி பத்து பிரபலங்கள் பத்து இடத்தில் எதற்கும் தயாராக இருக்கும் பத்து சீலிப்பர் செல்களை நம்பி களத்தில் இறங்கினால்; எந்த நிலத்தையும் துண்டு வேறு கண்டம் வேறாக சிதைத்து விட முடியும்.சீலிப்பர் செல்களுக்கா
இங்கே பஞ்சம் ? சீலிப்பர் செல்களில் இருந்து உருவாகிற அதிகாரத் தலைமைகள் எந்த ரூபத்தில் சமூகத்திற்குள் வந்தாலும் அது தீமையையே விளைவிக்கும்.ஏனெனில் இவர்களின் ஆழ்மனத் தாகம் தீர்வுகளை கோருவது அல்ல.புற சமூகத்தின் மீது தாங்கொணா அதிகாரத்தைக் கோருவது.புற சமூகத்தின் அனைத்து அதிகாரத்தையும் தங்கள் வயப்படுத்த விளைவது.மிகவும் ஆபத்தான மனோபாவம் இதுவே.குறிப்பிட்ட சில பிரச்சனைகளை மட்டுமே பேசி போராளிப் பாவனை கொள்கிற பலரும் இயங்குவது இந்த மனோபாவத்தின் அடிப்படையிலேயே ஆகும்.

நான் ஓரிடத்தில் அமைதியாக வாழ விரும்புகிறேன்.தவிர்க்க இயலாமல் அங்குள்ள நெருக்கடிகள் என்னைப் போராட தூண்டுகின்றன என்றால் அது வேறு விஷயம்.எங்கு சென்றாலும் நான் ரெடிமேடாக போராட தயாராகச் செல்கிறேன் என்றால் அது மற்றொரு விஷயம் .

மிகவும் இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட்டாலே தவிர; மக்கள் இயல்பு வாழ்க்கையை பறிகொடுப்பதை ஒருபோதும்  விரும்புவதே இல்லை என்பதை அறிந்து கொள்ளும் வரையில் இவர்களுக்கும் தங்கள் போராளி வேடத்தின் அலுப்பு குறைய போவதில்லை.

ஐரோம் ஷர்மிளா நீங்கள் பிரபல போராளிதான் இல்லையென்று சொல்லவில்லை.உங்கள் திருமணம் சாமானியர்களின் திருமணத்தைக் காட்டிலும் சிறப்பும் கொண்டதுதான் அதிலும் எனக்கு சந்தேகமில்லை.ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் எளிமையானது .நீங்கள் தமிழ்நாட்டின் கூடுதல் கவர்னராக யாராலும்  நியமிக்கப்பட்டு இங்கு வந்து சேரவில்லை. நீங்கள் வந்துதான் ரட்ஷிக்க முடியும் என்றும் நாங்கள் யாரும் மனுப்போட்டு நீங்கள் இங்கு வந்து சேரவில்லை.சாமானியர்களுக்கு  உள்ள அதே வாயும் ,மூலமும்தான் உங்களுக்கும்.இங்குள்ள சீலிப்பர்   செல்களை  நம்பி முடிவுகளை எடுக்காதீர்கள் .அவர்கள் உங்களை இங்கிருந்து துரத்தாமல் விடவே மாட்டார்கள்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"