Posts

Showing posts from July, 2017

ஐரோம் ஷர்மிளா நீங்கள் தமிழ்நாட்டின் கூடுதல் கவர்னர் அல்ல.

Image
ஐரோம் ஷர்மிளா நீங்கள்  தமிழ்நாட்டின் கூடுதல் கவர்னர் அல்ல. ஐரோம் ஷர்மிளாவின் திருமணம் இங்கே பிரச்சனையாகவில்லை.அவர் இந்தியாவின் எந்த இடத்திலும் தனது அமைதியான வாழ்க்கையைத் தொடரமுடியும் .இந்த போராளிகள் எங்கு சென்றாலும் தங்கள் விதியின் சுருளையும் எடுத்துக் கொண்டுதான் செல்கிறார்கள் .அதுதான் பிரச்சனையே.அவர்கள் கொண்டிருக்கும் தன் முனைப்பின் இருள் அவர்களை சும்மா இருக்க விடுவதில்லை.கொடைக்கானலிலும் ஒரு போர்ச் சூழலை ஏற்படுத்துவேன் என அவர்கள் சபதமேற்பதுதான் சிக்கலாகிவிடுகிறது. இயல்பான வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துவேன் என்கிற விதத்தில் ஊடகங்களில் இவர்கள்  ஏற்படுத்துகிற அச்சமே சிக்கலுக்கு காரணம்.மக்கள் இவற்றை ஏற்பதில்லை. பிரபலமான ஒரு மனிதர் தான் செல்கிற இடமெங்கும் தன் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவேன் என கோசமிட்டுக் கொண்டே சென்றால் என்னவாகும் ? இந்த போராளி மனோபாவத்தின் சிக்கலான அம்சம் ,தங்களை சாமானியர்கள்  இல்லை என கருதுவதிலிருந்து தொடங்குகிறது.அவர்கள் எப்போதும் தங்களை குட்டி சாம்ராஜ்யத்தின் எஜமானர்கள் என கருதுவதிலிருந்து தொடங்குகிறது.பல போராளிகளின் உளப்பாங்கு இதுதான்.நிலவுடைமையின் சாராம்ச

அடையாளங்களை வழிபடுவது எப்படி?

Image
அடையாளங்களை வழிபடுவது எப்படி? இது நமக்குப் புதியதல்ல.புனித அடையாளங்கள் அனைத்தையும் வழிபட மட்டுமே அறிந்த மக்களாகிய நமக்கு இது முதல் அனுபவமும் அல்ல. இந்திய அரசின் கொடூரமான முகம்,தன்னை மறைத்துக் கொள்ள உருவாக்கிக் காட்டிய கருணை முகம் அப்துல் கலாமுடையது.நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இது ஒரு தனி மனிதனின் முகம் அல்ல.ஐரோம் ஷர்மிளாவிடமும் , கூடங்குளத்திலும் தனது ஈவிரக்கமற்ற முகத்தை உறுதியாக வெளிபடுத்திக் கொண்டிருக்கும் இந்த அரசின் கருணை முகம்.இந்த கருணை முகம் நிஜமானதுதானா? இந்த முகத்திற்கு பல சாயங்கள் உண்டு.அறிவு,தொழில் நுட்பம்,இந்தியாவின் வல்லரசு கனவு என்று பலவற்றையும் உள்ளடக்கியது இந்த கருணை முகம்.சிறுபான்மையினரின் தரப்பையும் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டிருத்தல் இதம் ,மகத்துவம்..இந்திய அரசு தனது பிரகடனமாய் உருவாக்கிய அடையாளங்களிலேயே ஆகச் சிறந்த சிற்பம் இது என்றும் சொல்லலாம்.ஆகச் சிறந்த கடவுள் சிற்பம்.வகுத்தெடுத்த பொது மனசாட்சி. கழிந்த பதினைந்து வருடங்களில் இந்திய தேசியத்தின் தொழிநுட்பக் கடவுளாக கலாம் உருவாக்கப்பட்டார்.அது கருணையின் சாயலில் உருவாக்கப்பட்டது.இந்த கதாபாத்திரத்தை நிற

இடைவெளி இதழ் 2

Image
இடைவெளி இதழ் 2  வெளிவந்துள்ளது.எழுதுவதற்கும் ,படிப்பதற்கும் ஆசையைத் தூண்டுகிற இதழ்.என்னுடைய எட்டு கவிதைகள் இந்த இதழில் வெளிவந்துள்ளன.சில இதழ்கள் தான் கையில் வைத்திருக்கும் போது பெருமையாக உணரச் செய்பவை.இடைவெளியும் அவற்றில் ஒன்றாக இணைந்திருக்கிறது. முடிந்தவர்கள் விலைக்கு வாங்கி இதழை  படித்துப் பாருங்கள்.150  பக்கங்களில் நல்ல தாளில், நல்ல கட்டுமானத்தில் ,நல்ல படைப்புகளோடு இருக்கிறது இடைவெளி 2 லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள் 1 எனது அறை திறந்துதான் இருக்கிறது எப்போதும் போலவே எப்போது வேண்டுமாயினும் நீங்கள் வரலாம் நீங்கள் யார் என்று கேட்க மாட்டேன் ஊர் பெயர் அவசியமற்றது உங்கள் பாலினம் என்ன ? தேவையில்லை முதலில் கண்ட கனவில் திறக்கப்பட்டதிந்த கதவு எட்டு பாழிகள் இருந்தன நீங்கள் உங்கள் பெருமைகளை எடுத்து வந்தால் இங்கே உங்களுக்கு சோர்வு தட்டக் கூடும் திறக்கப்பட்ட எட்டு பாழிகள் வழியே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் தெருக்கள் சாலைகள் வீடுகள் கேந்திரங்கள் கிளிகள் சிட்டுக் குருவிகள் என எனக்கு ஒன்பது கண்கள் தெரியுமா ? எட்டாவது பாழியிலிருந்து உற்றுப் பார்த்துக் கொண்டிர

சிறைச்சாலைகள் வதைக்கூடங்களாக இருக்க வேண்டும் என்பவரா நீங்கள் ?

Image
சிறைச்சாலைகள் வதைக்கூடங்களாக இருக்க வேண்டும் என்பவரா நீங்கள் ? சசிகலா இருக்கும் கர்நாடகா சிறையில் வழக்கமாக நோயுற்ற ,வயதான கைதிகளுக்கு வழங்கப்படுகிற சலுகைகள்தான் சசிகலாவுக்கு வழங்கப்பட்டவை என்று இன்று வெளியாகும் தகவல்கள் பேசுகின்றன.பார்ப்பன அக்ரகாரச் சிறை மேனுவல் சிறை அதிகாரிகளின் அனுமதியோடு நோயுற்றவர்களுக்கும்  ,வயோதிகர்களுக்கும் சில சிறப்பு சலுகைகள் வழங்கலாம் என்று சொல்கிறது.தனியே அடுப்பு வைத்து சமைத்துக் கொள்வது,ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்வது ,மேஜை செய்தித்தாள்களுக்கான அனுமதி,புத்தகங்களை வருவித்துப் படிப்பதற்கான அனுமதி ஆகியவை சிறை மேனுவலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.சசிகலா பெற்று வந்த சலுகைகள் சிறை மேனுவலுக்கு உட்பட்டவையே தவிர சட்ட திட்டங்களுக்குப் புறம்பானவை அல்ல.நமக்கு பொதுவாகவே அதிக பட்ச புனித பிம்பங்கள் தேவைப்படுவது போலவே அதிக பட்ச வில்லன் கதா பாத்திரங்களுக்கும் தேவையாக இருக்கின்றன.இந்த  இரண்டிற்கும் இடைப்பட்ட  வாழ்வை நம்மால் எதிர்கொள்ள முடிவதில்லை.நோயுற்ற குரங்கை மனநோயாளி பாதுகாப்பது போல இந்த நிலவரத்தை மனக் கோணல் அதிகாரிகள், ஊடகங்கள் சமமாக பங்கிட்டுக் கொள்கின்றன. சிறை

ஊழலை மிகைப்படுத்துவதில் உயர்சாதித் தன்மை ஒளிந்திருக்கிறது

Image
ஊழலை  மிகைப்படுத்துவதில் உயர்சாதித் தன்மை ஒளிந்திருக்கிறது எங்கள் பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒருமுறை அவர் பேசிய விஷயம் என்னை வெகுவாகக் கவர்ந்தது .அவரை அவருடைய செயல்களால் எனக்குப் பிடிக்கும் .அவை எதுவும் வெற்றுப் பாசாங்கு வேலைகளாக இருந்ததில்லை.நடைமுறை சார்ந்து அனுபவத்துடன் பேசுபவர்.ஒருமுறை பேருந்து நிலைய வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ,அவரும் ஒற்றை ஆளாக வந்து நின்றார்.ஏராளமான ஆழ் துளைகள் மூலம் பேருந்து நிலையத்திற்குள் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக நடைபெற்ற பணி அது.அரைகுறையாக வேலையை செய்து வைத்திருந்தார்கள்.எவ்வளவு ஆழத்திற்கு குழிகள் அமைக்கப்பட வேண்டுமோ ,அந்த அளவு சரியாக அமைக்கப்படவில்லை . அவரிடம் ஒப்பந்தக்காரர் சரியாகத்தான் இருக்கிறது என்று காரணங்களை சொல்லிக் கொண்டே இருந்தார்.ஒரு அளவிற்கு மேல் பொறுமையற்று நானும் கொத்தனாக இருந்து இந்த நிலைக்கு இன்று வந்திருப்பவன்தான் என்று கூறிய அவர் நேரடியாக வேலையில் இறங்கி; எவ்வளவு குறைவான ஆழத்தில் குழிகள் இருக்கின்றன என்று நேரடியாக செய்து காட்டினார்.பின்னர் அத்தனை குழிகளும் மீண்டும் வேலைகள் செய்து ச

அப்பைய்யா இந்திரா காந்தியை காட்டித் தந்தார்

Image
அப்பைய்யா இந்திரா காந்தியை காட்டித் தந்தார் நான் சொல்வது எழுபத்தைந்து அல்லது எழுபத்தாறாக இருக்கலாம்.கடைசி தம்பி பிறந்து நாகர்கோவில் கோபால பிள்ளை மருத்துவமனையில் இருந்தான்.எங்கள் ஊருக்கும் நாகர்கோவிலுக்கும் ஒன்பது கிலோமீட்டர் தூரம்தான் இடைவெளி .அப்பைய்யா அப்பம்மையுடன் சென்று காண்பதற்காக நாங்கள் குழந்தைகள் கிளம்பிக் கொண்டிருந்தோம்.அப்பைய்யா வெளியூர்களுக்கு செல்ல வேண்டுமெனில் ஏகதேசம் வெளிநாடுகளுக்குச் செல்வது போல கிளம்புவார்.அப்போதெல்லாம் நாகர்கோவிலுக்குச் செல்வது கூட தொலைதூரத்திற்குச் செல்வதை போன்றதுதான்.அப்பைய்யா குளிப்பது வரையில் சாதாரணமாக இருப்பார்.குளித்து முடித்து விட்டார் எனில் மிகவும் துருசமாக நடந்து கொள்வார்.அப்பைய்யா என்று நான் குறிப்பிடுவது என்னுடைய அப்பாவின் தகப்பனாரை .அதாவது தாத்தா .அவர் பெயர் ஆதி நாராயணன் நாடார்.அப்பம்மை என சொல்வது பாட்டி சீதா லட்சுமியை . தாத்தா , பாட்டியை எங்கள் குடும்பத்தில் அப்பைய்யா ,அப்பம்மை என பேரக் குழந்தைகள் அழைப்பதே வழக்கம். சிறுவயது சிற்றூருக்கு என் வயதில் மிகப் பெரிய நிதானம் இருந்தது.பர பிரம்மம் சதா நிறைந்திருந்த ஊர் .சாலை கிழக்கிலிருந்து

கமல் ஹாசனுக்கு உண்மையாகவே அரசியல் தெரியவில்லை.

Image
கமல் ஹாசனுக்கு உண்மையாகவே அரசியல் தெரியவில்லை. முழுதும் கற்பனையான தளத்திலிருந்து கான்வென்ட் குழந்தைகளின் அரசியல் பேசுகிறார் கமல் ஹாசன் .இங்குள்ள கள நிலவரத்திற்கும் அவர் பேசுகிற அரசியலுக்கும் தொடர்பில்லை.இந்த இடத்தில்தான் அ.தி.மு.க அமைச்சர்களோடு அவருக்கு முரண்பாடு ஏற்படுகிறது.கழிந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியைக் காட்டிலும் ,அதற்கும் முந்தைய கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியை காட்டிலும் ஊழல் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் குறைவு என்பதே உண்மை.இந்த ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்சியில் இருப்பதற்கே   வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு சதா போதத்தோடு இருந்தாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.ஊழலை பொறுத்தவரையில் கடந்த இரண்டு ஆட்சிகளை விட இப்போது சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் இந்த உண்மைக்கு புறம்பாக கற்பனையான, யார் மீது வேண்டுமாயினும் சுமத்த தக்க  ,உயர் வர்க்க மிகை புகார்களை ; இந்த ஆட்சியின் மீது சொல்லும் போதுதான் பிரச்சனையாகிறது."நாங்களே பட்டினியில் இருக்கிறோம். நீ எங்களை ஸ்டார் கோட்டால் சாப்பாடு என்பாயா ? "என்கிற விதத்தில் அமைச்சர்கள

குண்டர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்வதே கூட தவறு எஜமானர்களே

Image
குண்டர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்வதே கூட தவறு எஜமானர்களே வளர்மதி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக மூன்று நாள்களாக எழுத நினைத்து இயலாத மனநிலை .இது முற்றிலும் தவறானது என்பதை இங்கே புரியச் செய்வதில் ஒருவிதமான கடுமை சூழ்ந்திருப்பது தெரிகிறது.நமது கூட்டான மனநிலைகள் அசாதாரணமாக மாறிவருவதாக தொடர்ந்து உணர்ந்து வருகிறேன்.வளர்மதியின் அரசியல் பின்னணி காரணமாகவோ அல்லது அவருடையது போன்ற அதிருப்தி அரசியலின் உள்நோக்கங்கள் புரியாமலோ இதனை நான் சொல்லவில்லை.வழக்கமாக குண்டர்கள் மீது இவ்வழக்கைப் போடுவதே கூட சட்டத்திற்குப் புறம்பான செயல்.அந்த சட்டம் முறைப்படியான சட்டம் அல்ல.மனித உரிமைகளின் மாண்பைக் குலைக்கிற ,மனித உரிமைகளில் அளவிற்கு அதிகமாக அத்துமீறுகிற ஒரு சட்டம். அப்படியிருக்கும் போது இதுபோல மாணவர்கள்,அரசியல் இயக்கங்களில் உள்ளவர்கள் எதிரிகள் எல்லோர் மீதும் இதனை பிரயோகப்படுத்தலாம் என அரசு நினைப்பது மிகவும் ஆபாசமானது.முதலமைச்சர் இந்த வழக்கு பற்றி பேசிய விதம் மிகவும் அருவருப்பானது.அரசாங்கம் ஒருவிதமான காண்டாமிருகத் தன்மையை அடைந்து வருவதையே இச்செயல்கள் உணர்த்

தமிழ் ,மலையாள கவிஞர்கள் சந்திப்பு

Image
தமிழ் ,மலையாள கவிஞர்கள் சந்திப்பு இடம் : லெனின் பாலவாடி,வழுதக்காடு, திருவனந்தபுரம்-14 16.07. 2017 ஞாயிறு காலை 9.30 தமிழ்,மலையாள கவிஞர்கள் சந்திப்பு முதற்கட்டமாக நாளை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.தமிழில் இருந்து ஆறு கவிஞர்களும் , மலையாளத்தில் இருந்து ஒன்பது கவிஞர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இதன் அடுத்த கட்ட சந்திப்பு நடைபெறும். வெறும் ஸம்ப்ரதாயமானதொரு நிகழ்வாக அல்லாமல்,தமிழ் கவிதைகளை மலையாள மொழியிலும் ,மலையாள கவிதைகளை தமிழுக்கும் இந்த சந்திப்புகள் கொண்டு செலுத்தும்.இரண்டு மொழிகளின் இந்த பரிவர்த்தனை இரண்டு மொழிகளின் வளத்திற்கும் புதிய ஊட்டம் சேர்க்கும்.மலையாள கவிஞர்கள் இதில் பெரிய ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.நாமும் நமதார்வம் கொள்வோம். இந்த சந்திப்பின் கவிதைகளும் இரண்டு மொழிகளிலும் மொழிபெயர்ப்பாக உள்ளன.ஓராண்டு காலத்திற்குள் தமிழின் இயங்கிக் கொண்டிருக்கும்  எந்த கவிஞனும் விடுபட்டு விடாத வண்ணம் இந்த சந்திப்புகளில் இடம்பெறச் செய்து விட வேண்டும் என்கிற முனைப்பு எனக்கு உண்டு.அதுபோலவே இதுவரையிலான தமிழ்,மலையாள பரிவர்த்தனை நிகழ்வுகள

தமிழ்நாட்டு மாணவர்கள் பேரில் நீதிமன்றம் போர் தொடுக்கிறது

Image
தமிழ்நாட்டு மாணவர்கள் பேரில் நீதிமன்றம் போர் தொடுக்கிறது NEET - தமிழ்நாட்டு மாணவர்கள் பேரில் நீதிமன்றம் போர் தொடுக்கிறது இப்போதைய கெடுபிடிகள் கல்வியில் நீடித்தால்; இப்போது நடைபெற்று வருகிற காரியங்களின் எதிர்விளைவு அறியப்படுவதற்கு இன்னும் ஐந்தாறு வருடங்கள் ஆகும் . தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் வெளி மாநில மாணவர்கள் ஆக்ரமித்து இங்குள்ள மாணவர்கள் விறுதே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அப்போதுதான் இப்போதைய கெடுபிடிகள் என்ன ,வேதனை என்ன ? என்பது விளங்கும்.குஜராத் போன்ற மாநிலங்களில் ஆறோ,ஏழோ மருத்துவக் கல்லூரிகளே உள்ளன.மொத்தமாகப் பார்த்தால் 600 இடங்கள் வரும்.ஆனால் தமிழ் நாட்டின் நிலை அதுவல்ல.சுமார் 4000 இடங்களை இழக்கும். அகில இந்திய தேர்வுகள் என்பவை எளிமையாகச் சொன்னால் பணக்காரர்களுக்குரியவை.ஆறேழு ஆண்டுகள் பத்து லட்சத்திற்கும் அதிகமான பணம் செலவழித்து பயிற்சி மையங்களில் எட்டாம் வகுப்பு நிலையில் இருந்தே பயிற்சியை தொடங்குபவர்களுக்குரியது.அவை அனைத்துமே நகரங்கள்,பெரு நகரங்கள் சார்ந்த பயிற்சி மையங்கள்.நேரடியாக பயிற்சி மையங்களின் துணையின்றி இந்த தேர்வுகளில் பங்கேற்கி

வினைப்பதிவுதான் அந்த நறுமணம் குன்றா மாலை

Image
வினைப்பதிவுதான் அந்த நறுமணம் குன்றா மாலை நானொன்றும் புதிதாகச் சொல்வதில்லை வினையை ஒரு கட்டத்தில் நிறுத்தக் கற்றுக் கொள்ளவேண்டும்.இது மிகவும் எளிமையானது.எல்லா வினைகளும் பதிவாகும்.பதிவு ; நாம் கூறுகிற நியாயங்களைக் காரணங்களை பொருட்படுத்துவதில்லை.அது உள்ளது உள்ளவாறு பதிவாகும்.இப்படித்தான் பதிவாக வேண்டும் என்று நாம் அதன் மீது எந்த செல்வாக்கையும் பயன்படுத்தவே முடியாது.அறிவின் செல்வாக்கையோ,அறத்தின் செல்வாக்கையோ ,செய்த பேருபகாரங்களின் செல்வாக்கையோ,திருப்பணிகளின் செல்வாக்கையோ,அருங்கொடைகளின் செல்வாக்கையோ  எதையுமே அதன் மீது செலுத்த முடியாது.இவற்றின் மூலம் கொஞ்சம் அதன் ஆங்காரம் தணிக்கலாம் அவ்வளவுதான்.வினையை நிறுத்திக் கொள்வோமெனில் அதன் வேகம் தணிந்து பதிவுகள் செல்வாக்கை இழக்கும்.அது புதுத்தன்மை  பெறும். வினையை நிறுத்திக்  கொள்ளுதல் என்பதற்கு செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளுதல் என்று பொருள் கிடையாது.தேவையற்ற வினைகளின் ஓட்டத்தைக் காரியங்களில் இருந்து பொறுப்பை விலக்கிக் கொள்ளுதல் அது.அதன் மூலம் தேவையான காரியங்களின் செயல் ஓர்மைக்குள் வரும்.தேவையான செயல்கள் துரிதமாகும். நாம் பொதுவாகவே தேவையற்ற அன

உடலின் பாதி நோய்கள் மனம்தான் .மீதி வயோதிகம்

Image
உடலின் பாதி நோய்கள் மனம்தான் .மீதி வயோதிகம் எனது உடலின் பாதி நோய்கள் மனம்தான் என்பதை மிகப்பெரிய தாமதத்திற்குப் பிறகுதான் கண்டு கொண்டேன்.சிறு வயது தொடங்கி ஏதேனும் மாத்திரைகளைத் தின்று கொண்டிருக்க வேண்டும்.இல்லையெனில் எல்லாம் சரியாக இருக்காது என்றோர் எண்ணம்.இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி ஒருவேளைக்கு 100  கிராம் அளவிற்கு மிச்சர் தின்பதை போல மாத்திரைகள் பெருகி விட்டன. தூக்கப் பிரச்சனை எனக்கு இருபதாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது.அதுவரையில் அளவற்ற தூக்கம்.தூக்கப் பிரச்னையை இதுகாலம் வரையில் மாத்திரைகளைக் கொண்டே இழுத்து வந்தேன்.கழிந்த  ரமலான் தினத்தன்று எனக்கு முக்கியமாக தேவைப்படக் கூடிய தூக்க மாத்திரை கிடைக்கவில்லை.அது வழக்கமாக நான் மருந்துகள் வாங்கிற இஸ்லாமியரின் கடையில் மட்டுமே கிடைக்கும்.நகரம் முழுக்க தேடியலைந்தும் வேறு எங்குமே கிடைக்கவில்லை.தூக்கம் ஒருநாள் கெட்டால் சரியாக உணவு உண்ண முடியாது,இரண்டு நாட்கள் கெட்டால் வலிப்பு உண்டாகி விடும் என்பதே மனப்பதிவு.அப்படித்தான் நடக்கவும் செய்யும்."அப்பாவை புனிதப்படுத்துதல் "கவிதை நூலை வாசித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.பலர்