டம்ளர் உரிமைகள் என்பது அரசியல் கபட நாடகம்

டம்ளர் உரிமைகள் என்பது அரசியல்  கபட நாடகம்

தமிழர்களை பன்னெடுங்காலமாக ஏமாற்ற பயன்படும் கபடநாடகம்.ஒரு அடையாளம் அரசியல் அதிகாரத்தைத் திரட்டுவதற்காக மட்டும் எப்போது   முன்வைக்கப்படுகிறதோ அப்போதிலிருந்து அது தனது கபட நாடகத்தின் முதற்காட்சியை தொடங்குகிறது.பூர்வீக அடையாளங்கள் அரசியல் ரீதியாக முன்வைக்கப்பட வேண்டியவை அல்ல.இன மேலாண்மைக் குரல்கள் எந்த அரசியல் பின்னணியிலிருந்து கிளம்பும் போதும் அவை இன மையவாதத்தை நோக்கி கீழிறங்கும் தன்மை கொண்டவை.தமிழன் கொண்டுள்ள தாழ்வுணர்ச்சியை அதிகப்படுத்தவே இது உதவும்.நிதர்சனமான பிரச்சனைகளில் இருந்து பின்னகர்த்திக் கொள்ள மட்டுமே இவை உதவும்.

தீவிர தமிழ் பற்றாளர்கள் என்று தங்களை முன்னிறுத்தும் பலரை சிறு வயது முதற்கொண்டு பார்த்து வருகிறேன்.அவர்களில் பலர் தமிழ் மொழி,பண்பாடு சம்பந்தமாக குறைந்தபட்ச  அறிவைக் கூட கொண்டிருந்ததில்லை.இப்படி தீவிர தமிழ் பற்றை ஜோடிப்பவர்களில் பலர் தமிழர்கள் அல்லாதவர்களாக இருப்பதையும் கவனித்திருக்கிறேன்.ஓங்கி இருந்த இனம் என்று தொடங்கி தன் சொந்த சொந்த சாதிக்குள் வந்து சரணடைவார்கள் பலர்.தங்கள் சொந்த சாதியினர் மட்டுமே தமிழர்கள் என்று அவர்கள் பேசத் தொடங்குவதற்கு முன்னர் இடத்தை காலி செய்துவிட்டு ஓடி விடுவதே நல்லது.

தீவிர தமிழ் தேசியர் ஒருவர் நான்கு பக்கங்களுக்கு தமிழ் பற்றை எனக்கு பாடம் சொன்ன பிறகு உங்கள் இயக்கத்தில் தமிழோடு தொடர்பு கொண்ட எத்தனைபேர் இருக்கிறீர்கள் என்று கேட்டேன்.தனது மகள் ராஜ் தொலைக்காட்சியில் பணிபுரிவதாகவும் "தமிலென்றால்" உயிரை விட்டுவிடுவாள் என்றும் சொன்னார்.எழுத்துப் பிழையுடன்தான் அதனை அவர் உச்சரித்தார்.மிகையாகச் சொல்லவில்லை. அவர் எனக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த இடம் ஒரு பொது இடம் .என்னால் எங்குமே தப்பித்து ஓடமுடியாதிருந்த இக்கட்டான ஒரு இடம்.தமிழ் தேசியர்கள் பொதுவாகவே ஒரு தொல்குடி குரங்கின மனோபாவம் கொண்டவர்கள்.கண்டாலே தப்பித்து ஓடிவிட வேண்டும்.சிலர் உளறுவது கூட அழகாக இருப்பதுண்டு.இந்த தமிழ் தேசியக் குரங்குகள் அப்படியானவை அல்ல.தன் புண்ணை தானே சுரண்டித் தின்று சாகும் வரம் படைத்தவை.இப்போது புதிதாக கம்யூனிஸ்டுகள் பேசும் தமிழ் தேசியம் இருக்கிறதே, இது கபட நாடகம் மட்டுமல்ல.தமாஷ் நாடகத்தின் லெட்டர் சீன.கம்யூனிடுகளுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் "தோலர்களே" !.கூடங்குளம் விஷயத்தில் பெரும்பாலும் தமிழ் தேசியர்கள் முன்வந்து மனமுவந்து  கெடுத்தார்கள்.வந்து குவிந்த மலையாள மக்களை மேடையில்  தமிழ் தேசியம் பேசி விரட்டினார்கள்.

நாங்கள் ஒருமுறை ஆர்வக் கோளாறில் குற்றாலத்தில் மேலேறி மேலேறி மேலேறிச் சென்று விட்டோம்.ஏராளமான தமிழ் குரங்குகள் .எங்களில் சிலர் உணவு வைத்தால் அவை அகலாது, பின்னர் தாக்கத் தொடங்கி விடும் என்பதறியாமல் மிருக நலம் பேணி உணவுகளை தாரை வார்க்க ஐநூறுக்கும் மேற்பட்டைவை எங்களை சூழ்ந்து விட்டன. நாங்களும் தமிழ்தான் என்று நாங்கள் மன்றாடியதை அவை நம்பத் தயாராக இல்லை.போர் தொடுக்கத் தயாராகி  விட்டன.பின்னர் அங்கிருந்த உள்ளூர்வாசிகள்தான் எங்களைக் காப்பாற்றினார்கள்.

நீங்கள் மரபிலும் ,சொந்த மொழியிலும் ,பூர்வீகத்திலும் அக்கறையும் பற்றும் கொண்டவர்கள் எனில் ஒருபோதும் உள் நோக்கி சரியமாட்டீர்கள்.பிறரில் கலப்பீர்கள்.விரிவு படுவீர்கள்.தமிழ் நாட்டின் தமிழ் பற்று சாக்கடையில் கலந்த தேன்.அதிகார சாதி வெறி.தாழ்வுணர்ச்சியின் பெருங்கூச்சல்

உரிமைகளை பேசுவது தற்கொலை செய்து கொள்வதற்காக அல்ல. பற்று என்பது இணங்குவது,அறிவது,விரிவு படுத்துவது.விரிந்தகன்று செல்லுவது.தன் புண்ணை தான் சொரிந்து தான் இறப்பது அல்ல.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"