அ. மார்க்ஸ் என்னும் கிறிஸ்தவ வெறியர் ,கருத்தியல் கோமாளி

 அ. மார்க்ஸ் என்னும் கிறிஸ்தவ வெறியர் ,கருத்தியல் கோமாளி

அ.மார்க்ஸின் உள்ளடக்கம் கிறிஸ்தவத்தின் கலாச்சார ஆக்கிரமிப்பு வெறி மட்டுமே .மார்க்சிய கருத்தியல்கள் வழியாக அவர் அதனை பூசி மெழுகி கவசமாக பயன்படுத்தி வருகிறார்.தனது கிறிஸ்தவ வெறியை ஸ்தாபித்துக் கொள்ள தீவிர  இஸ்லாம் ஆதரவு நிலை போன்று தன்னை புனைவு செய்து கொள்கிறார் .அது தனக்கு ராணுவம் போன்று பயன்படும் என்பது அவருடைய கணிப்பு.உறவிற்கு அது அவருக்கு சாதகமாக தங்கள் பாதுகாப்பின்மையின் கதி நிலை காரணமாக சாய்வு கொண்டிருப்பதும் உண்மை .ஆனால் அவருடைய கருத்தியல் வேஷம் கலையும் பட்சத்தில் இஸ்லாமியர்களுக்கு அவர் துரஷ்டமானவராக மாறிவிடுவார் என்பதில் சந்தேகமே வேண்டாம் .அவருடைய இதுவரையிலான பிரதிகளைக் கொண்டு அவருடைய கிறிஸ்தவ வெறியை வெளிப்படுத்துவது மிகவும் எளிது.அவருடைய கற்பனைகள் ஊர் கோமாளிகளின் கற்பனைகளுக்கு நிகரானவை.கார்ல் மார்க்ஸின் பெயரின் பின் பகுதியை சூட்டிக் கொண்டதால் ஒருவர் மார்க்சியர் என்றெல்லாம்   ஆகிவிடாது


கருத்தியல் ரீதியாக எதிர்நிலையிலோ மாறுபட்டோ இருப்பவர்களைக் குறித்து வெற்று அவதூறுகளை எந்த எல்லை வரையில் வேண்டுமாயினும் சென்று சிந்தக் கூடியவர் அவர்.சிறுவயது பழக்கம் தொடங்கி இன்றுவரையில் ஒரு பெரிய மனிதனுக்கான லட்சணம் எதையுமே பெறவில்லை.முப்பது வருடங்களாக அவரை கவனித்து வருகிறேன்.அவருடைய கற்பனை குதிரைகள் உணவு பற்றாக்குறை கொண்டவையும் கூட.எவ்வளவு மெனக்கெட்டாலும் அவற்றால் எம்பிப் பறக்க இயலுவதில்லை.இடறிச் சரிந்து விழுகின்றன.ஒருவர் மீது புகார்களும் அவதூறுகளும் சொல்ல குறைந்த பட்ச தகவல்களெனும் அவசியம்.

பொதுவாக அவருடைய அவதூறுகளுக்கு சட்டப்படி எனில் வழக்கு நடத்தலாம்.அது ஒரு மெனக்கெடு.பெரும்பாலும் துணியமாட்டார்கள் என அவர் நினைப்பதிலிருந்தே அவருடைய  அவதூறுகள் அசாத்தியமான துணிச்சலைப் பெறுகின்றன. தொடர்ச்சியாக அவர் ஒரு அறிவாளியில்லை என்று ஆக்காட்டி இதழ் நேர்காணலில் நான் பேசியது தொடங்கி எனக்கு அவர் இந்துத்துவா பட்டம் கட்டி வருகிறார்.நான் ஒரு இந்து .ஆனால் இந்துத்துவா அல்ல.இத்தனையும் பலமுறை தெளிவு படுத்தியாயிற்று.இப்போது ஒரு படி மேலேறி ஆர்.எஸ்.எஸ் தொடர்பு கொண்டவர் என்று சொல்லியிருக்கிறார்.இப்படியொருவர் சூழலில் இயங்கி கொண்டிருக்கிற பிறர் ஒருவரைப் பற்றை குறிப்பிட குறைந்தபட்ச ஆதாரங்களேனும் ,தரவுகளேனும் அவசியம்.அ.மார்க்ஸின் அவதூறுகளுக்கு எப்பொழுதேனும் இந்த அடைப்படை நாகரிகங்கள் தேவை பட்டிருக்கிறதா என்ன ? ஆர்.எஸ்.எஸ் தொடர்பு எனக்கு இருக்குமேயானால் எனக்கு அதனை ஒத்துக் கொள்வதிலும் ,வெளிப்படையாக அறிவிப்பதிலும் யாதொரு தயக்கமோ ,அச்சமோ கிடையாது.அவரை பின்பற்றுபவர்கள் பேரிலும் அவருக்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது என்பதுதான் அவருடைய பொய்களுக்கு அடிப்படை.எங்கள் ஊர் பக்கமெல்லாம் பொய் புகார்களுக்கு அடிதான் கொடுப்பார்கள்.பொய் புகாரகள் அவ்வளவு தீவிரமானவை.


ஒற்றை  இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்புக் கருத்தரங்க முழுமையான பேச்சுகளும்   இரண்டுமணிநேரம் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வெளிப்படையாக உள்ளது.அதில் சகல விஷயங்களை பற்றியும் வெளிப்படையாக எழுத்தாளர்கள் பேசியிருக்கிறோம் .நியாயமாகப்   பார்த்தால் இந்துத்துவர்களுக்கும்,ஒற்றைப் பண்பாட்டு ஆதரவாளர்களுக்கும் தான் அது அச்சத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.ஆனால் அ.மார்க்ஸ் போன்ற கிறிஸ்தவர்களுக்கு அது குலைநடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதென்றால் அதன் பொருள் என்ன ? கற்பனை   குதிரைகள் வளர்த்துவதற்கு ஒருவருக்கு ஒரு ஆயுட்காலம் போதாதே ?

நான் பல கட்சிகளில் இருந்திருக்கிறேன்.விஜய் காந்த் கட்சியில் கூட.நானும் என்.டி.ராஜ்குமாரும் இணைந்து முதல் தடவை விஜய்காந்த் தேர்தலில் நிற்கும் போது வேலை செய்திருக்கிறோம்.தி.மு.கவில் பல ஆண்டுகள் கிளை செயலாளராக இருந்திருக்கிறேன்.ஆம்.ஆத்மீ கட்சியில் மட்டுமே இணைய விரும்பவில்லை.களத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்தமைக்கு  எனக்கென்று பல்வேறு காரணங்கள் உண்டு. ஆம் ஆத்மீயை கூடங்குளம் எதிர்ப்பை முன்வைத்து ஆதரித்து வேலைகள் செய்தோம்.பா.ஜ .கவை  எதிர்த்து.பா.ஜ.கவிற்கு மட்டும்தான் ஒருபோதும் ஆதரவு நிலை எடுத்ததில்லை.எனக்கு நாகர்கோயிலில் ஆர்.எஸ்.எஸ்.அலுவலகம் எங்கே இருக்கிறது என்பது கூட எனக்குத் தெரியாது.பின்னர் எப்படி அரசாங்கம் கள்ள வழக்குகள் பதிகிறது என்று சதா கூக்குரலிடும் அ.மார்க்ஸ் ,எங்கள்  மீது கள்ள வழக்கு பதிகிறார் ? ஒருவேளை அவர் அதிகாரத்திற்கு வந்தால் எங்களைத் தூக்கி குண்டாஸில் போடுவாரா தெரியவில்லை.இவருடைய அருவருப்பான மனோபாவத்திற்கு முன்பாக பா.ஜ.க பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.அவர்கள் எங்களையொன்றும் இன்னும் குண்டாஸில் போட்டு விடவில்லையே !

சரி என்பாடு எப்படி வேண்டுமாயினும் இருந்து விட்டுப் போகட்டும் .எனது மனைவி தி.மு.க வாக இருப்பதற்கும் ,தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ததற்கு என்ன சம்பந்தம்  ? பெண்ணிய ஊக்க மருந்தே பதில் கூறு

#
நேற்றைய அவருடைய பதிவு இது.ஒரு நண்பர் அனுப்பி வைத்தது.

அ. மார்க்ஸ் பதிவு,

தி.மு.க நண்பர்களுக்கு .. (2)
*************************************
முன் பதிவுத் தொடர்ச்சி

நேற்று நான் இட்ட பதிவு நினைவிருக்கலாம். அதிமுக விற்குள் மட்டுமல்ல, திமுகவிற்குள்ளும் பாஜக நுழைந்து கையகப்படுத்தும் வேலை மும்முரமாக நடக்கிறது. இன்றைய நிலையில் திமுகவில் பிளவு என்பது அதன் குடும்ப அரசியல் பிளவாகத்தான் அமையும்.ஏற்கனவே நிகழ்ந்த அழகிரி பிரிவைப் பொருத்த மட்டில் அழகிரி ஒரு அப்பாவி. அவரை வைத்து பாஜக உள்ளே நுழைய இயலவில்லை. நுழைவதில் பயனில்லை என்பது அவர்களுக்கும் தெரியும்.

ஆனால் தற்போது கனிமொழி, ராஜா போன்றோரின் டில்லி அரசியல் தொடர்புகள் அத்தனை எளிதாகப் புறக்கணிக்கத் தக்கவை அல்ல. டில்லி பத்திரிகையாளர்கள் சொல்லக் கூடிய செய்திகள் கவலை அளிக்கின்றன. சில முக்கியமான பாஜக தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு பேணப்படுகிறது.

சில நாட்கள் முன் சென்னையில் நடைபெற்ற "ஒற்றை இந்துத்துவா மாநாடு" என்பதையெல்லாம் ஏதோ இந்த இலக்கியவாதிகளுக்கிடையில் நடந்த போட்டி, பொறாமை சார்ந்த இலக்கிய அக்கப்போராக நினைத்து எளிதில் புறக்கணித்துவிடாதீர்கள். இதற்குப் பின்புலமாக இருந்த லட்சுமி மணிவண்ணன், ஜெயமோகன் ஆகிய இருவருடைய இந்துத்துவத் தொடர்பு உலகறிந்த விடயம். இந்துத்துத்துவம் இன்று பல்வேறு மட்டங்களில் மிக மிக மிக நுணுக்கமாக தமிழகத்தில் வேலை செய்து வருகிறது. அந்த புராஜெக்டில் ஓர் அங்கம் இது.

லட்சுமி மணிவண்ணன் ஆர்.எஸ்,எஸ் கருத்தியல் மற்றும் தொடர்புகள் உடையவர் மட்டுமல்ல. அவர் திமுக தொடர்புடையவரும் கூட. அவரது மனைவி சமீபத்தில் நாகர்கோவிலில் நகரசபைத் தேதலில் திமுக சார்பாகப் போட்டியிட்டவர்.  தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோருக்கு மிக நெருக்கமானவர். இந்த ஒற்றை இந்துத்துவா இலக்கியக் கூட்டத்திலும் தமிழச்சி பேச இருந்து பின் ஏற்பட்ட எதிர்ப்புகளால் பின்வாங்கியவர். கனிமொழியும் எப்போதும் இந்த மாதிரி வலதுசாரி இலகிய வட்டத்துடன் தொடர்புடையவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
திமுகவுக்குள் பா.ஜ.க ஊடுருவலாம் என்கிற என் பதிவு மிகுந்த
அக்கறையோடு செய்யப்பட்ட ஒன்று. திராவிடக் கடசிகள் அதன் திராவிடத் தன்மையை இழக்காமல் தொடர வேண்டும் என்ற உண்மையான அக்கறை உள்ளவன் நான்.

திராவிட அரசியலின்பால் அக்கறையோடு திமுகவை உண்மையாக நேசிக்கும் நண்பர்கள் புரிந்து கொண்டால் சரி

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"