Posts

Showing posts from 2017

மீண்டும் பிம்ப அரசியலின் தொடக்கம்

Image
மீண்டும் பிம்ப அரசியலின் தொடக்கம் ஆன்மீக அரசியல் என்கிற ரஜினியின் முதல் பன்ச் டயலாக்கே நன்றாகத்தான் இருக்கிறது.தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் இருபது வருடங்களுக்கு பன்ச் டயலாக்கிற்கும் குறைவில்லை.செய்தித்தாள்களில் கேளிக்கைக்கும் குறைவில்லை.தமிழர்கள் பொதுவெளியரசியலிலும் கேளிக்கை குன்றக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ரஜினிக்கு என்னுடைய நல்வாழ்த்துகள் தமிழர்கள் கொள்கை அரசியலை ஏற்று கொள்ளவில்லை என்பது ரஜினியின் அரசியல் பிரவேசம் மூலம் வரலாற்று ரீதியாக மீண்டும் நிரூபணம் ஆகிறது.கொள்கை அரசியல் பேசுவோர் தனிநபர் அரசியலை முன்வைப்பவர்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மக்களின் நம்பகத்தன்மையை பெறுவது கடினமாக இருக்கிறது.கொள்கை அரசியல் தங்களை முற்றிலுமாக ஏமாற்றிவிடுகிற அதிகாரம் என்றே மக்கள் கருதுகிறார்கள் . இதற்கான உளவியல்,சமூகவியல் காரணங்கள் எளிமையாக கடந்துவிடக் கூடியவை அல்ல.அதிலிருக்கும் உண்மையின் மூர்க்கத்தன்மை பல செய்திகளை உள்ளடக்கியிருக்கிறது.ரஜினியின் அரசியல் பிரவேசம் அடுத்த காலகட்டத்திற்குள் எம்.ஜி.ஆர்.நுழைவதனை ஒத்த நிகழ்வு.இது தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில், அரசியல் குழப்பம்

தன் வேலை தள்ளிப் போகும் வேலை

Image
தன் வேலை தள்ளிப் போகும் வேலை என்னுடைய ஆறாவது கவிதை தொகுப்பு படிகம் வெளியீடாக வர உள்ளது.அதற்காக கவிதைகளை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.என்னுடைய கவிதைகளைத் தான் சேகரிக்கிறேன் என்றாலும் இந்த பணி வேறொருவருடைய வேலை போன்று எனக்கு உள்ளது.இதுவரையிலான என்னுடைய கவிதைகள் கை கொண்டு காகிதங்களில் எழுதப்பட்டவை.இந்த தொகுப்பு முழுதுமே இணையத்தில் முகநூலில் என  எழுதியவை. கவிதைகள், சிறு குறிப்புகள்,சிறிய நூல் மதிப்புரைகள் போன்றவற்றை இணையத்திலேயே எழுதிவிடுவதில் எனக்கு எந்த பிரச்சனைகளுமில்லை.உரைநடையை எழுதுவதற்கே தனியே ஒரு மனம் தேவைப்படுகிறது.அது தனிமையால் ஊறிய மனம். அதனை இணையத்தில் எழுதுவதில் எனக்கு பயிற்சி இன்னும் கூட வில்லை.கூடினால் நல்லதுதான் எளிதாக இருக்கும்.இல்லையெனில் உரைநடைகளுக்காக தனியே நேரத்தை ஒதுக்கி எழுத்தாணியை கையில் எடுக்க வேண்டும். என்னுடையவற்றைத் தொகுப்பது உண்மையாகவே சிரமமாக இருக்கிறது."வைத்தியன் பொண்டாட்டி புழுத்துச் செத்தாள்"என்பார்கள்.அது போலவே இதுவும்.நீங்கள் உங்கள் வீட்டு கல்யாணத்திற்கு சந்தைக்கு மரக்கறி வாங்கப் போகவேண்டும் வருகிறீர்களா ? என நள்ளிரவில் கூட அழைத்துப் பார

ஆர்.கே நகர் தேர்தலை தி.மு.க பின்னடைவாகக் கருத வேண்டியதில்லை

Image
ஆர்.கே நகர் தேர்தலை தி.மு.க பின்னடைவாகக் கருத வேண்டியதில்லை. ஆனால்  நிலைப்பாடுகளை உறுதியாக எடுக்க முடியாதவர் ஸ்டாலின் என்கிற மக்கள் கருத்தை தி.மு.க மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.போராட்டங்கள்,கொள்கை நிலைப்பாடுகள் என்று அனைத்தையுமே தி.மு.க சடங்காக மாற்றி வைத்திருக்கிறது என்று மக்கள் கருதுகிறார்கள்.இரட்டை நிலைப்பாடுகள் மூலம் மக்களை ஏமாற்றுவதை தி,மு.க மாற்றியமைத்துக் கொள்ளவில்லையானால் வருகிற சட்ட மன்ற தேர்தலிலும் ,அனைத்தும் சாதகமாக இருந்தாலும் கூட தி.மு.க தோல்வியடையப்போவது உறுதி.கழிந்த  தேர்தலில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் மீண்டும் அவர்களுக்கு ஏற்படும். நீங்கள் என்ன கொள்கையைக் கொண்டிருக்கிறீர்கள் ,நீங்கள் யார் என்பது எதனையும் மக்கள் இப்போது  கணக்கில் கொள்வதில்லை  .நீங்கள் எப்படி செயல்படுவீர்கள் ,என்ன செய்வீர்கள் என்பதை மட்டுமே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.தி.மு.க சமீபகாலங்களில் மக்களுக்காக பொய்யான ஒரு நிலைப்பாடும் ,மத்தியில் ஏற்பட வேண்டிய சமரசத்திற்காக மாற்று நிலைப்பாடும் என இரட்டை நிலைப்பாடுகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.இதனை மக்கள் அறியமாட்டார்கள் என அவர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்

TTV தினகரனின் வெற்றி தமிழ் மனம் ஈட்டித் தந்திருக்கும் மாபெரும் வெற்றி

Image
TTV தினகரனின் வெற்றி தமிழ் மனம் ஈட்டித் தந்திருக்கும்  மாபெரும் வெற்றி இவ்வெற்றி சாமானியமானதில்லை.தமிழ் மனம் தனது சுயதன்மையை இந்த வெற்றி மூலம் பிரகடனம் செய்திருக்கிறது என்று சொல்லலாம்.அந்த அளவிற்கு இது முக்கியத்துவம் கொண்டதொரு வெற்றி.இந்த தேர்தல் வெற்றி தமிழ் மனோபாவத்திற்கு எதிராக சிந்திக்கும் ,ஏளனம் செய்யும் ஊடகங்கள்,அறிஞர்கள் ,தேசிய அரசியலின் மனோபாவ அடிமைகள் அனைவருக்கும் சிறந்த பாடத்தை ஏற்படுத்தியிருக்கும் வெற்றி. இரண்டு அரசாங்கங்கள் இந்த வெற்றிக்கு எதிராக முழுமையாக  பாடுபட்டிருக்கின்றன.ஊடகங்கள் துணை புரிந்திருக்கின்றன.அரசின் அமைப்புகள் முழு வீச்சில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன .ஏராளமான சதிவேலைகள். இவை அனைத்தையும் தாண்டி , மக்கள் அனைத்து விதமான அதிகாரத்தின் சதிகளையும் தாண்டி , மக்கள் இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறார்கள்.இது மக்களுக்கான வெற்றி என்பதுதான் இதன் சிறப்பம்சம் .சதி வேலைகள்,அதிகார பலம் அனைத்தையும் மெளனமாக தங்கள் ஜனநாயக பூர்வமான வாய்ப்பின் மூலம் உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள் மக்கள். இந்த தேர்தல் முடக்கப்பட்டு மீண்டும் கிடைத்த வாய்ப்பின் மூலம்  மக்கள் சாதித்திருக்கிறார

இன்குலாப் மிகச் சிறந்த மனிதர் ஆனால் இலக்கிய மதிப்பற்றவர்

Image
இன்குலாப் மிகச் சிறந்த மனிதர் ஆனால் இலக்கிய மதிப்பற்றவர் உயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்.மிக உயர்ந்த லட்சியங்களைக் கொண்டிருந்தவர் .வாசகர்களிடமும் ,இலக்கியவாதிகளிடம் அவர் பெற்றிருந்த செல்வாக்கைக் காட்டிலும் அரசியல்வாதிகளிடம் அவர் பெற்றிருந்த செல்வாக்கே அதிகம். மற்றபடி இன்குலாப்பின் எழுத்துக்கள் உயர்ந்தவொரு மனிதனின் உயரிய நல்லெண்ணங்களே அன்றி அவற்றிற்கு இலக்கிய மதிப்பு எதுவுமே கிடையாது.இலக்கியத்திற்கான விருதுகள் இலக்கியத்திற்காக ,எழுத்துக்களின் இலக்கிய மதிப்பிற்காக வழங்கப்படுதல் வேண்டுமே அல்லாது பிற காரணங்களுக்காக வழங்கப்படுதல் கூடாது. நமது சூழலில் அரசியல்வாதிகளே அல்லது அரசியல் தரப்பினரே பெரும்பாலும் இலக்கியத்தின் பெறுமதியைத் தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.இது நல்லதல்ல.அவர்களிடமிருந்து பறித்து சில நேரங்களின் பெறுமதிகள் இலக்கியத்தின் கரங்களை வந்தடைய போராட வேண்டியிருக்கிறது.இலக்கிய விருதுகளை இலக்கிய வாசகர்களும் , இலக்கியத்தின் தரப்புகளும் முடிவு செய்யவேண்டும்.அது முதற்கொண்டுதான் நாம் ஒரு நாகரீக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகும்.நல்ல மனிதர் தாமே இருக்கட்டுமே என்றால்

புயலுக்கும் மழைக்கும் வேற்றுமையில்லை

Image
புயலுக்கும் மழைக்கும் வேற்றுமையில்லை மனித துயரங்களிலும் வேற்றுமையில்லை. துயரங்களை முன்வைத்து பேத அரசியலை முன்னெடுப்பது நல்ல நெறியல்ல.பேதங்களையும் பிளவுகளையும் பொதுமக்கள் ஒருபோதும் முன்னெடுப்பதில்லை.அவர்கள் தங்கள் அன்றாடம் சகஜ நிலைக்குத் திரும்புவதையே காத்திருக்கிறார்கள்.விஷமிகளுக்கு  வேறுவகையான உணவுகள் தேவைப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில்  ஏற்பட்ட ஓகி  புயல் பாதிப்புகள் மீனவ சொந்தங்களுக்கு ஏற்படுத்திய துயர் ,உயிரிழப்புகளையும் உள்ளடக்கியது.பொருட்சேதங்களைக் காட்டிலும்  உயிர் சேதமும்,இழப்பும் கொடியது. அத்துடன் அவர்கள் கோடிக்கணக்கான மதிப்புகள் கொண்ட படகுகள் ,வலைகள் ,பிற உபகரணங்கள் என சகலத்தையும் இழந்திருக்கிறார்கள்.பல்முனைப் போராட்டங்களுக்குப்  பிறகு அரசு எந்திரம் அவர்களை முன்னிட்டு லேசாக அசையத் தொடங்கி இருக்கிறது.சற்றே ஆறுதல் தருகிற காரியம் இது. இதுபோலவே நிலப்பகுதியில் ஏற்பட்ட உயிர் சேதமும் ,பொருட்சேதமும் கேலி செய்வதற்கு உரியன அல்ல.நிலமுள்ள விவசாயிகளுக்கு ஏதேனும் ஆறுதலுக்கான நிவாரணங்களேனும் கிடைக்க வாய்ப்புண்டு.இவர்கள் பொருளாதார நிலையில் படகில் மீன்பிடிக்கும் கோடீஸ்வரர்களு

அது என்ன செத்துத் தொலைத்தால் வீர வணக்கம் ?

Image
அது என்ன செத்துத் தொலைத்தால் வீர வணக்கம் ? 1 நானொரு பொறிக்குள் வசிக்கிறேன் அதன் கண்ணிகளை வாயிற் கதவுகளாக ஆக்கிக் கொண்டேன் சரளமாக அதனுள் செல்வதும் வருவதும் என எனக்கது இப்போது பொறியெனப் படவில்லை அதற்கும் எனக்கான பொறியது என்பது மறந்து போயிற்று இன்று பொறிக்குள்ளிருந்து வெளியே வந்து பொறிக்கான பொறியொன்றை வாங்கி பொறிக்குள் திரும்பினேன் அதனை மேஜையாக்கி அதன் மீது சில வார்த்தைகளை வைத்தேன் வெளியில் நின்றொருவன் மதுக்குவளையுடன் பொறிக்குள்ளிருக்கிறாய் தெரியவில்லையா உனக்கு என கத்திக் கொண்டிருந்தான் மேஜையிலிருந்த வார்த்தைகள் இதுவொரு கனவென்பது உனக்கு விளங்கவில்லையா? என்று கேள்வி கேட்கின்றன அவனை நோக்கி 2 அந்தக் குழந்தை நான்கு வழிச் சாலையில் ரத்தத் தடயங்களுடன் முகத்தை வானுக்கு உயர்த்திய வண்ணம் நிலைகுத்திக் கிடக்கிறது சுற்றி இருபக்கமும் வாகனங்கள் சிதறிய வாகனத்தில் பேச்சுமூச்சில்லை தன்மடியில் குழந்தையை கை கொண்டு அரவணைத்து உடல் திருப்பிய பெருஞ்சாலை கேட்கிறது இதற்கு யார் பொறுப்பேற்கப் போகிறீர்கள் ? குழந்தையின் கண்கள் கடைசியாகக் கண்ட காட்சி அப்படியே அந்த இடத்தில்

கேட்பவரே" கவிதைத் தொகுப்பு பற்றி கவிஞர் ராஜன் ஆத்தியப்பன்

Image
"கேட்பவரே" கவிதைத் தொகுப்பு பற்றி கவிஞர் ராஜன் ஆத்தியப்பன் [ கேட்பவரே என்னுடைய நான்கு கவிதை நூல்களின் தொகுப்பு  .படிகம் வெளியீடு.பக்கம் 320  விலை - 320 .இந்த கவிதை நூல் தேவைப்படுபவர்கள் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் .மதிப்புரைக்காக கவிஞர் ராஜன் ஆத்தியப்பனுக்கு நன்றி கேட்பவரே ஆசிரியர் - லக்ஷ்மி மணிவண்ணன் படிகம் வெளியீடு 4 -184  தெற்கு தெரு ,மாடத்தட்டு விளை,வில்லுக்குறி அஞ்சல் ,கன்னியாகுமரி மாவட்டம் ,தமிழ்நாடு - 629  180   தொலைபேசி எண் - 98408  48681 ]  அங்கீகரிக்கப்படாத கனவின் வலி நிறைந்த இடமாக படைப்பாளி இருக்கிறான். - சி.மோகன் இசைப் பாடல்களுக்கு ஒரு மாய வல்லமையுண்டு. சொற்களை அதன் அர்த்தத்திலிருந்து வெளியேற்றுகிறது அது என்பதே . எனது பால்யம் இசையை பிரதான சுகஉணர்ச்சியாய் ஏற்றிருந்தது. அதிகாலையில் எங்கள் வீட்டில் ஒலிக்கும் கொழும்பு சர்வதேச வானொலியின் பாடல்களில் அய்யா பல் துலக்கும்போது அல்லது சுய சவரம் செய்யும்போது ஏதேனுமொரு பாடலின் வரியில் எனது விழிப்பு நிகழும்.விழிப்பின் சற்று முன்பிருந்தே பாடல் எனக்குள் துலங்கத் துவங்கியிருக்கும். நான் மனதிலெண்ணிய பா

மத மாற்றங்களும் இந்தியாவில் பெருமரபுதான்

Image
மத மாற்றங்களும் இந்தியாவில் பெருமரபுதான் மத மாற்றங்கள் குறித்து இந்தியாவில் இந்து  அடிப்படைவாதிகளிடம் சகிப்பற்ற கண்ணோட்டம் நிலவுகிறது.மத மாற்றங்களையும் அவர்கள் ஏற்கவில்லை.அதேசமயத்தில் ஏற்றத்தாழ்வுகளையும் அவர்கள் பழைய முறைப்படி பராமரிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.அதிசயமான முரண் இது.இந்த குரலை முன்னெடுப்பு செய்கிறவர்கள் இன்னும் பெருவாரியான மக்களை ஏற்கவும் முன்வரவில்லை.மத மாற்றங்களை பொறுத்தவரையில் இரண்டு மூன்று தலைமுறைகள் வரையில் மதம் மாறுகிறவர்கள்தான் நெருக்கடிக்குள்ளாகிறார்கள்.எனவே இது மாறுகிறவர்களின் பிரச்சனையே அன்றி பிறருடைய ஆதங்கங்கள் பொறுத்தமற்றவை.ஆதாயத்திற்காக மாறுகிறார்கள் ,திருமணத்திற்காக மாறுகிறார்கள்,ஏற்ற தாழ்வுகளை சகிக்க இயலாமல் மாறுகிறார்கள் எப்படியிருந்தாலும் அதில் எந்தவிதமான பிரச்சனைகளும் கிடையாது.ஆதாயத்திற்காகத் தான் மாறுவார்கள் .ஒரு விஷயத்தில் ஒரு ஆதாயமும் கிடையாது ; அவமானம் மட்டுமே மிஞ்சுகிறது என்றால் மாறுவதுதானே சிறந்த விஷயம் ?.மாறாமல் இருந்து இருந்த இடத்திலேயே புழுத்து சாவதற்கா மனித வாழ்க்கை ? ஒரு கலாச்சாரம் ஒத்துவரவில்லை என நினைத்தால் பிறிதொன்றைத் தேர்வு செய

மார்க்சியம் ஒரு அடிப்படை பாடம்

Image
மார்க்சியம் ஒரு அடிப்படை பாடம் அறிவு தளங்களில் பங்காற்ற விரும்புவோருக்கு மார்க்சியம் ஒரு அடிப்படை பாடமாக இருப்பதே நல்லது.தத்துவங்களைப் பயில விரும்புவோருக்கு  அதுவே சிறந்த தொடக்க கல்வியாக இருக்க முடியும்.அதிலிருந்து பிற தத்துவங்களுடன் உறவு பெற்றவர்களே சிறந்த நடத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள் .  பின்னர் மார்க்சியத்தைக் கைவிட நேரலாம் ,நேர வேண்டும் எனினும் அது மூலபாடமாக உள்நின்று இயங்கும் தன்மையும் சாராம்சமும் கொண்டிருக்கும். விவாதங்களில் ஈடுபடுபவர்கள் அவர்கள் எத்தகைய தத்துவ முறைகளை பின்பற்றினாலும் சரி,மார்க்சியத்தை தொடக்க கல்வியாகப் பெற்றிருந்தவர் எனில் அவருடன் உரையாடுவது எளிமையானதாக இருக்கிறது.இல்லையெனில்  சிறிது நேரத்திலேயே அவர் தனது குடும்ப நம்பிக்கைகளை பற்றி இறுகப் பேசுபவராக மாற்றமடைந்து விடுகிறார்.அந்த விதத்தில் மார்க்சியம் அதில் விலகுபவர்களுக்கும் கூட பங்களிப்பு செய்யும் தத்துவம். பிற தத்துவங்களுக்கு அத்தகைய வலிமை இல்லையா என்றால் உண்டு.ஆனால் தத்துவங்கள் குடும்ப நம்பிக்கைகளாக வந்து சேருகிற போது மிகுந்த இறுக்கத்தை அடைந்து விடுகிறது.மார்க்சியத்தையும் குடும்ப நம்பிக்கையாக பாவி

அளத்தங்கரை "கோயில் வீடு" இந்து நாடார் குடும்பம்

Image
அளத்தங்கரை "கோயில் வீடு" இந்து நாடார் குடும்பம் எட்டு தலைமுறைக் குடும்பம். எட்டாவது தலைமுறையில் பேரன் பேத்திகளுடன் மரகதம்மாள்.நிறைந்த தேஜஸ் .எட்டு தலைமுறை கடந்து செல்வதென்பது சாதாரணமான காரியமில்லை.மூன்றாவது தலைமுறையே பெரும்பாலும் கசந்து விடும்.நாலில் ஷீணம் உண்டாகும் .முரண்படும்.மன சஞ்சலங்கள் தோன்றும். அதனையெல்லாம் ஒரு குடும்பம் கடந்து செல்வதென்பது தெய்வ காரியமின்றி வேறில்லை.ஐந்து தலைமுறை கடந்தாலே அரசியல் அதிகாரம் ஏற்பட்டு விடும்.முதல் தலைமுறையிலேயே ஏற்படுகிற அரசியல் அதிகாரத்திற்கும் இதற்கும் அநேக வித்தியாசங்கள் உண்டும்.மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த குடும்பத்தைச் சார்ந்தவர். எட்டு தலைமுறை என்பது கிளைகிளையாக மொத்த சமூகத்திலும் ஊடுருவி இருக்கக் கூடியது . அளத்தங்கரை குடும்பம் இதற்கு உதாரணம்.இந்த குடும்பத்திற்கு கிழக்கு வடக்காக ஏராளமான கிளைகள்.முகிலன் குடியிருப்பு,ஈச்சன் விளை,மணிகெட்டிப்பொட்டல் என்றும் அதிகமாகவும்.இன்று இந்தியா முழுவதிலும் இருக்கிறார்கள்.உள்ளூரிலும் மருத்துவர்கள் , வழக்கறிஞர்கள் ,பொறியாளர்கள் என்று பலவாறாக.அளத்தங்கரை குடும்பம் என்றால் இன்றும் ப

பக்தியில் பழைய நியதிகளை மட்டுமே வற்புறுத்தக் கூடாது

Image
பக்தியில் பழைய நியதிகளை மட்டுமே  வற்புறுத்தக் கூடாது சமத்துவம்,சம உரிமை போன்ற பொது நியதிகளும் மனிதனின் நீண்ட தீவிரமான பயணங்களின் மூலம் கண்டடைந்தவைதாம்.பொது நியதிகளைக் கடைப்பிடிப்பதில் உள்ள நெருக்கடிகளை பிரச்சனைகளை  திறந்த மனதோடும்,நேர்மையுடனும்  விவாதிக்கவேண்டும் .விவாதிப்பது கண்டடைந்த பொது நியதிகளை நோக்கி சில அடிகளை எடுத்து வைக்க உதவ வேண்டுமே அல்லாது பொது நியதிகளை பின்னோக்கி இழுக்கும் நோக்கத்தை அடைப்படையாகக் கொண்டிருத்தல் கூடாது .ஏற்பில் முன்னகர வேண்டும் .அய்யன் அய்யப்பனின் சன்னிதானம் பெண்களும் கலந்து கொள்ளும் வண்ணம் மாற்றம் கொள்ள வேண்டியது காலத்தின் முன் அவசியம்.தவிர்க்கவே இயலாதது. அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதில் உள்ள நடைமுறை சிரமங்கள் சிலவற்றை தொடர்ந்து அய்யனின் சன்னிதானத்திற்கு சென்று வருகிறவன் என்கிற வகையில் நெருக்கமாக அறிவேன்.பல்லாண்டுகளாக ஆண்கள் மட்டுமே சென்று கொண்டிப்பதன் காரணமாக ,ஆண்கள் செல்ல மட்டுமே உகந்ததாக அதன் வசதிகள் பழக்கமாகியிருக்கின்றன.சன்னிதானத்தைச் சுற்றியுள்ள வரிசைகள் தற்போது ஆண்கள் செல்வதற்கு மட்டுமே உகந்தவையாக உள்ளன.இதுபோலவே பெண்கள் மட்டுமே செல்லத் த

வழிமறிக்காதீர்கள் போலீஸ்கார்

Image
வழிமறிக்காதீர்கள் போலீஸ்கார் எங்கள்  ஊர் பகுதிகளை  ஒட்டித்தான் வெகுகாலமாக வசித்து வருகிறேன்.அங்கே இங்கே போய் வந்ததெல்லாம் மிகவும் சொற்ப காலங்கள்தாம்.எவ்வளவோ மகாராஜாக்கள் ஆண்டிருக்கிறார்கள் .எம்.ஜி.ஆர்.,கருணாநிதி ,ஜெயலலிதா இப்படி.தமிழ்நாட்டில் ஆளுவோரை மகாராஜாக்கள் என்றுதான் சொல்லவேண்டும்.மக்கள் வாக்கிலிருந்து வருகிற மகாராஜாக்கள் .இந்த பகுதிகளை சுற்றி லட்சம் மைல்களுக்கும் அதிகமாக பயணித்திருப்பேன்.வாகனங்களில் வண்டிகளில் என்று பல விதங்களில் .ஏன் கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்திற்காக கேரளா எல்லையில் கடற்கரையில் தொடங்கி திருநெல்வேலி எல்லை வரையில் நடந்தும் வந்திருக்கிறோம்.ஆனால் திருடர்களை போன்று போலீஸ்கார்  பொறி வைத்துப் பிடிப்பதை இப்போதுதான் காண்கிறேன்.எல்லோருமே எடப்பாடியை ஒத்த ,பன்னீரை ஒத்த சம வயது தோற்றங்காட்டும் போலீஸ்கார்.முதல் முறையாக மகாராஜா தோரணை அற்ற நடுவயது போலீஸ்கார் தோரணை கொண்ட ஆட்சியாளர்கள் இவர்கள்தாம்.பணிவின் பயங்கரவாதிகள். கேரளத்தின் நிலை வேறு .அதனால் தமிழ்நாட்டின் அரசியல் குறைபாடுடையது என்னும் எண்ணம் எனக்கில்லை.இங்குள்ள சுபாவம் இப்படி.மக்கள் மகாராஜா தோரணை இருந்தால் மட

"சிலேட் " விக்ரமாதித்யன்-70 சிறப்பிதழ்

Image
சிலேட் சிலேட் இந்த இதழ் "விக்ரமாதித்யன் - 70 " சிறப்பிதழாக தயாராகிக் கொண்டிருக்கிறது.விக்ரமாதித்யன் பற்றிய கட்டுரைகள் மற்றும் வழக்கம் போல கதைகள்,கவிதைகள்,மொழிபெயர்ப்புகள் என இதழ் அமையும் .படைப்புகளை அனுப்பலாம்.slatepublications @gmail .com .மின்னஞ்சல் முகவரிக்கு படைப்புகளை அனுப்புங்கள். ஒவ்வொரு முறையும் இதழுக்கு செலவாகும் முதலீடுகளை திரும்பப் பெற இயலுவதில்லை.வழக்கமாக சிற்றிதழ்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற பிரச்சனைதான் இது.மீண்டும் மீண்டும் இதனை மிகைப்படுத்த விரும்பவில்லை. இதனைய ும் கடந்தே ஒவ்வொரு இதழையும் கொண்டுவர வேண்டியிருக்கிறது .சிற்றிதழ் இயக்கம் என்பது இதனையும் உள்ளடக்கியதுதான் .கால தாமதங்களுக்கு வேறு எதுவும் காரணங்கள் இல்லை. சிலேட் இந்த இதழ் உருவாக்கத்திற்கு உதவி செய்ய விரும்புவோர் உங்கள் பங்களிப்பினை செலுத்த விரும்புவோர் கீழ்கண்ட கணக்கில் செலுத்தி விட்டு ,எங்களுக்கு தகவல் தெரியப்படுத்துங்கள்.நன்றி. LAKSHMI MANIVANNAN.A SB AC NO - 183100050300648 TAMILNAD MERCANTILE BANK LTD IFSC CODE -TMBL0000183 தொடர்பு எண் - 8220386795

கவிதைகள் - 16

Image
கவிதைகள் - 16 ஏரியைக் கடந்து செல்லும் போது ஏரியை எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லமாட்டேன் சிறுவயதில் மாடுகளுடன் சேர்ந்து குளித்த ஊருணியை அதில் விட்டுச் செல்கிறேன் என்பது ஏரிக்குத் தெரியும் ஏரி தன்னில் நீந்தத் தொடங்குவதை அப்போது அறியும் அந்த பால்ய வயதின் ஊருணி பிறகு இரண்டுபேரும் முங்கிக் குளிக்கத் தொடங்குகிறார்கள் என்னுடைய நீலத்தில் சின்னஞ்சிறிய குளம் சமுத்திரமாக 2 வழக்கமாக போகும் தெருவில் நான் எதையும் காண்பதில்லை வழக்கமாகப் போகும் தெருவிலிருந்து படியிறங்கி அல்லது படியேறி வழக்கமற்ற தெருவுக்குள் காலடி எடுத்து வைக்க வழக்கமாக போகும் தெருவின் அத்தனை காட்சிகளையும் பார்த்து விடுகிறேன் அப்போதும் வழக்கமற்ற தெருவின் காட்சிகளைப் பார்க்கிறேனா ? வழக்கமற்ற பெண் சுட்டிக் காட்டிச் செல்கிறாள் எனக்குள் எப்போதும் கனன்று கொண்டிருக்கும் காதலை அக்கரையில் இருந்து ஊர் பார்க்கப் பிடிக்கிறது எப்போதும் விளிம்பிலிருந்து பார்த்து கொண்டிருக்கிறேன் மையத்தை வழக்கமான பேருந்தில் நான் தூங்கிய வண்ணம் பயணிப்பது ஏன் என்பது இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கக் கூடு

இரணியல் அரண்மனையை எழுத்தாளர்கள்,கலைஞர்களுக்கான இல்லமாக மாற்றுங்கள்

Image
இரணியல் அரண்மனையை எழுத்தாளர்கள்,கலைஞர்களுக்கான இல்லமாக மாற்றுங்கள். சில தினங்களுக்கு முன்பு நானும் சூர்யாவும் மண்டைக்காடு பகவதியைப் பார்த்து விட்டு இரணியல் அரண்மனைக்குச் சென்றோம்.மழைச் சாரல். அரண்மனையின் சிதிலம் பேயாக முகத்தில் அறைந்தது.எவ்வளவோ பேர் இது குறித்து பேசியிருக்கிறார்கள்.இவ்வளவு சிதைவடைவதற்கு முன்னரே இதழ்கள் இது பற்றி எழுதியிருக்கின்றன. சுமார் நான்கு கோடி ரூபாய் புனரமைப்பதற்காக ஜெயலலிதா 2014  ல்  நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்.இதுவரையில் எந்த பணியும் தொடங்கப்படவில்லை.மட்டுமல்ல இப்போதைய நிலையில் அதனைப் புனரமைப்பது இயலாது .எல்லாமே முடிந்து கிடக்கிறது இரணியல் அரண்மனை.சிதிலத்தை அகற்றி எழுத்தாளர்கள்,கலைஞர்களுக்கான ஒரு இல்லமாக அதனை மாற்றலாம்.இந்த அரண்மனைக்கு இதுவரையில் எல்லோரும் கூட்டு சேர்ந்து செய்துள்ள  அநீதிக்கு அது பரிகாரமாக அமையும்.ஆனால் யார் செய்வார்கள் இதனை ? கேரளா அரசுக்கு இந்த அரண்மனையின் பேரிலும் ஆரம்பத்தில் ஆர்வம் இருந்தது.இப்போதைய நிலையை காணும்போது தமிழ்நாடு அவர்களுக்கு இதனை விட்டுத் தந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.அவர்கள் நிச்சயமாக பொலிவு படுத்தியிருப்பார

கந்துவட்டி பலரோடும் தொடர்புடையது

Image
கந்துவட்டி பலரோடும் தொடர்புடையது கந்து வட்டி என்பது பணத்தைக் கொடுத்து வசூலிப்பவரோடு  மட்டும் தொடர்புடைய ஒன்று அல்ல. பணத்தைக் கொடுத்து வாங்குகிறவர்கள் ஆயிரம் ரூபாய்க்கு ஐம்பது ரூபாய் என்கிற வட்டியில் கல்லூரிப் பேராசிரியர்கள்,வங்கி மேலாளர்கள் ஆகியோரிடமிருந்து பணத்தைப் பெறுகிறார்கள்.இவர்கள் மட்டும் என்றில்லை இவர்கள் எங்கள் ஊரில் அதிகம்.மேலும் பல தரப்பினரும் உண்டு. வசூலித்தாலும் இல்லையென்றாலும் ,வசூலிக்க இயலவில்லை என்றாலும் ஐம்பது ரூபாய் வட்டியை இவர்கள் கொடுத்தே ஆகவேண்டும்.இல்லையெனில் இவர்கள் தொழிலே செய்ய முடியாது.இரண்டாவது காரியம் சமூகத்தின் உள்ள பண தேவையின் இடத்தை கந்து வட்டி பிடித்து வைத்திருக்கிறது.நமது அனைத்து வங்கிகளும் ஏழைகள் விஷயத்தில் அடைந்துள்ள படுதோல்வியின் இடத்திலேயே இது வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு கல்லூரிப் பேராசிரியர் கந்து வட்டியில் பத்து லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள்.மாதம் அவர் அதன் மூலம் ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமாக வருமானம் பெறுகிறார் என்று பொருள்.யோசித்துப் பார்த்தால் வசூலிப்பவன் இவ்விஷயத்தில் வெறும் கூலியாள் மட்டுமே என்பது புலப்படும்

அபத்தம் என்பது ...

Image
அபத்தம் என்பது ... அகம் எவ்வாறு கம்போஸ் பண்ணப்பட்டு மெருகு பெறுகிறதோ ,அது உருகுலையும் போது ஏற்படுவது  அபத்தம்.அது ஒரு நிலை. ஒன்றில் ஒன்று முற்றுப்பெறுகிற, முடிவடைந்த ஒரு நிலை.  . படைப்பாளிகளைப் பொறுத்தவரையில் இத்தகைய நிலை பல முறை தங்களில் ஏற்படுவதை உணர்ந்திருப்பார்கள்.உடல் கட்டுமானம் உருவாவதைப் போன்றுதான் இதுவும் அகக்கட்டுமானம்.உடல் கட்டுமானம் ஒவ்வொருவருக்கும் ஒருமுறை மட்டுமே நிகழ்கிறது .ஆனால் இந்த அகக் கட்டுமானம் அவ்வாறானதல்ல.ஒன்று உருக்குலைந்து சரிந்து வீழ ,அபத்தம் தொற்றி மற்றொன்று எழுகிறது.அகக்  கட்டுமானத்தில் சரிவே நிகழாதவனை அல்லது சரிவு ஏற்படும் வாய்ப்பே இல்லாதவனை அல்லது அதற்கான வாய்ப்பே ஏற்படாதவனை சராசரி மனிதன் எனலாம்.அவனிடத்தில் படைப்பு செயல்பாடுகள் ஏதுமில்லை.இவன் தனக்கு வெளியில் எதுவுமே கிடையாது என்னும் நம்பிக்கை தரப்பைச் சார்ந்தவன்.தனது நம்பிக்கையை இரும்பு உலக்கையாக பற்றிக் கொள்ள நினைப்பவன் . இருப்பதிலேயே சுலபமான அகக் கட்டுமானம் என்பது அரசியல் கருத்துக்களால் அதனைக் கட்டி நிரப்புவதுதான்.விடலைகள் ,பெரும்பாலான அவசர பெண்கள் ,இரும்பு ஆண்கள் அதிகம் செலாவணி ஆவது இதன் பால்தான