"நிழற்தாங்கல்" - அழைப்பு
"நிழற்தாங்கல்"
புறக்கணிக்கப்படும் படைப்பாளிகளுக்கான வெளி - அழைப்பு
புறக்கணிப்பிற்குள்ளாகும் கவிஞர்கள் ,எழுத்தாளர்கள் ,கலைஞர்களுக்கான உறைவிடம் நிழற்தாங்கல்.சமூகத்தாலும் குடும்பத்தாலும் புறக்கணிப்பிற்குள்ளாகும் கவிஞர்கள் தங்குவதற்கும் செயலாற்றுவதற்கும் உரிய ஏற்பாட்டை ஏற்படுத்துவதற்கான நிழற்தாங்கல் அறக்கட்டளையின் முதல் ஆலோசனைக்கு கூட்டம் திருநெல்வேலியில் வருகின்ற 11 - 12 - 2016 ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
திருநெல்வேலி டவுணில் உள்ள சக்தி கலைக்களத்தில் வைத்து இந்த கூட்டம் காலை மணி பத்து முதல் இரண்டு வரையில் நடைபெறும்.
அருட்பணி ராஜன் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்.
கவிஞர்கள் லக்ஷ்மி மணிவண்ணன் , விக்ரமாதித்யன் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.
கூட்டத்தின் நிறைவாக எழுத்தாளர் ஷோபா சக்தி நடித்து கென்ஸ் திரைப்படவிழாவில் விருது பெற்ற தீபன் திரைப்படம் திரையிடப்பட
உள்ளது.அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் ஷோபா சக்தியுடன் திரைப்படம் குறித்த கலந்துரையாடல் நடைபெறும்.
Comments
Post a Comment