"ஓம் சக்தி ஓம் பராசக்தி "கட்டுரை நூலுக்கு பீமராஜா விருது


"ஓம் சக்தி ஓம் பராசக்தி "கட்டுரை நூலுக்கு பீமராஜா விருது


24  - 12  -2016  வருகிற சனிக்கிழமை மாலை 5  மணிக்கு ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள ஆனந்தா மண்டபத்தில்  நடைபெறுகிற விழாவில் வைத்துத் தருகிறார்கள்.ஒட்டியுள்ள நண்பர்கள் வந்து சேருங்கள்.விருதினை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் வழங்குகிறார்.

M .V .பீம ராஜா - ஜானகியம்மாள் அறக்கட்டளையின்
ஆனந்தாஸ் பீம ராஜா இலக்கிய விருது இந்த ஆண்டில் என்னுடைய "ஓம் சக்தி ஓம் பராசக்தி "கட்டுரை நூலுக்கும் ,நண்பர் ராமாநுஜத்தின் "சந்நியாசமும் தீண்டாமையும் " கட்டுரை நூலுக்கும் கிடைத்திருக்கிறது.

ராமானுஜம் டி.ஆர் .நாகராஜின் " THE  FLAMING  FEET " என்னும் ஆங்கிலத்தில் எழுத்தப்பட்ட நூலை  தமிழில் மொழிபெயர்த்தவர்.இவர் எழுதிய தற்கொலையைக் கொண்டாடுவோம் என்கிற கட்டுரை நூலும் மிகவும் முக்கியமானதொரு அரசியல் நூல்.மௌன வதம் என்கிற நாவலையும் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.சிறந்த அறிஞர்.

"ஓம் சக்தி ஓம் பராசக்தி "கட்டுரை நூல் பத்தியாக "அம்ருதா " மாத இதழில் எழுதத் தொடங்கி பின்னர் "குமுதம்  தீராநதி "மாத இதழில்  நிறைவு பெற்ற கட்டுரைகள் அடங்கிய நூல் .கயல் கவின் பதிப்பகம் வெளியீடு.

இந்த இரண்டு நூல்களுமே வாசகர்களால் படிக்கப்பட்டு உரிய முறையில் தேர்வு செய்யப்பட்டிருப்பதில் பெருமகிழ்ச்சி .நூல்களுக்கும் விருதிற்கும் இடையில் வாசிப்பு தவிர்த்து வேறு எந்தவிதமான பரிமாற்றமும் ஊடுருவலும் இல்லாததில் மன நிறைவு.

"ஓம் சக்தி ஓம் பராசக்தி " நூலுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் கையால் விருது பெற வேண்டியிருந்திருக்கிறது பாருங்கள்.விதி என்பது எப்போதும் முரண் நகையும் வேடிக்கையுந்தான் போலும்.

நண்பர்கள் முருகன் மகேந்திரன் ,வேலாயுதம் பொன்னுச்சாமி  மற்றும் இந்த நூலை நான் எழுதக்  காரணமாக இருந்த எனது நண்பர் தளவாய் சுந்தரம் ஆகியோருக்கு எனது நன்றி.

காலகாலமுமாகத் தழைக்க இந்த அறக்கட்டளைக்கு  என்னுடைய வாழ்த்துக்கள்.
இப்போது போலவே எப்போதும் வாசிப்பை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே விருது வழங்குங்கள்.அது மட்டுமே காலத்தில் நிற்கும்.வாழ்க வளமுடன்  

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"