"விஷ்ணுபுரம் விருது" தொடர்பான ஜெயமோகனின் கோரிக்கை

"விஷ்ணுபுரம் விருது"

தமிழ்நாட்டில் படைப்பாளிகள் ,கவிஞர்கள்,வாசகர்கள் இவர்களை மட்டுமே முன்வைத்து ஆக்கப்பூர்வமாக செயல்படும் ஒரேயொரு விருது என்று "விஷ்ணுபுரம் விருது" என்பது எனது அபிப்ராயம்.

தன்னிச்சையான படைப்பாளிகளுக்கு வேறு காரணங்கள் எதுவுமின்றி படைப்பின் காரணத்தை மட்டுமே முன்வைத்து வழங்கப்படும் விருது இது.எனக்கு இவ்விருதின் பேரில் மதிப்பிருப்பதற்கான காரணம் இது ஒன்றுதான்.விருது வழங்குவதை ஒட்டி அவர்கள் படைப்புகளை வாசகர்களோடு விவாதிக்கும் விதம் அருமையானது.நேரடியாகவே இதனை உடனிருந்து பார்த்திருக்கிறேன்.

விருதிற்குரியவரை உண்மையாகவே படைப்பை முன்வைத்து அவர்கள் கௌரவப்படுத்துகிறார்கள்.படைப்புத் தேர்வுகளில் வேறுபட்ட எண்ணங்கள்,வேறுபாடுகள் இருக்கலாம்.இருக்கத்தானே வேண்டும் ? அதன் செயல்பாடு பொருள் சார்ந்த காரணங்களால் குன்றக் கூடாது.இதுபோல நமக்கு வேறு முன்னுதாரணங்கள் இல்லை . சொல்லப்போனால் இதுபோல தமிழுக்கு மேலும் சில உத்வேகங்கள் தேவை.இலக்கிய செயல்பாடுகள் பேரில் மதிப்பு கொண்டோர் உள்ளன்போடு இந்த விண்ணப்பத்தை கருத்திற்கொள்ள வேண்டுகிறேன்.

படைப்பாளிகளுக்கு உறுதுணை செய்தல் ஈடிணையற்ற புண்ணியம்.

விருது தொடர்பாக ஜெயமோகனின் விண்ணப்பம் இது
--------------------------------------------------------------------------------
அன்புள்ள நண்பர்களுக்கு,

இவ்வருடம் விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 25 ஆம் தேதி மாலை கோவை பாரதிய வித்யா பவன் அரங்கில் நிகழவிருக்கிறது முந்தையநாள். 24 ஆம் தேதி காலைமுதல் உரையாடல்களும் எழுத்தாளர் சந்திப்புகளும் நிகழும்.

பரிசுபெறுபவர் குறித்த ஒர் ஆவணப்படமும் அவரைப்பற்றிய ஒரு நூலும் விழாவில் வெளியிடப்படும்.
வருபவர்கள் முன்கூட்டியே ரயில் முன்பதிவுகள் செய்து கொள்ளவேண்டுமென்று கோருகிறேன். பிற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்

தமிழகத்தில் இன்று நிகழ்ந்துவரும் மிகப்பெரிய இலக்கியவிழா இதுவே. இத்தனைபெரிதாக இதை உத்தேசிக்கவில்லை . இயல்பாகவே இது பெரிதாகி வந்தமைக்கு இளம் வாசகர்களுக்கு இது தேவையாக இருந்ததுதான் காரணம் என நினைக்கிறேன்
ஒவ்வொருவருடமும் இதன் செலவு அதிகரித்தபடியே செல்கிறது. பெரும்பாலும் நண்பர்களின் நன்கொடையால்தான் இவ்விழா முன்செல்கிறது. சென்ற ஆண்டு அது சற்றே சுமையாக ஆகிவிட்டது
ஆகவே இம்முறை விஷ்ணுபுரம் அமைப்பை ஒரு சிறிய டிரஸ்ட் ஆக பதிவுசெய்திருக்கிறோம். என் நண்பர்கள் நான்குபேர் கொண்ட இச்சிறிய அமைப்பு நிதிநிர்வாகத்திற்காக மட்டுமே.

இதுவரை வெளிப்படையாக நன்கொடைகள் பெற்றுக்கொண்டதில்லை, காரணம், முறையான அமைப்பு இல்லை என்பதுதான். இப்போது அவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது

விஷ்ணுபுரம் அமைப்புக்கு நிதிதவி செய்யும்படி நண்பர்களைக் கோருகிறேன். இது அனைவரும்கூடிச் செய்யும் விழாவாக நீடிக்கவேண்டும் என்பதே எங்கள் எண்ணம்

வங்கி விவரங்கள்
வங்கி ICICI BANK Ram Nagar Coimbatore
பெயர் VISHNUPURAM ILAKKIYA VATTAM TAMIL EZUTHALARGAL ARAKKATTALAI
கணக்குஎண் 615205041358
IFSC Code ICIC0006152



- ஜெயமோகன்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"