Posts

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

Image
  "புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்" நான் சந்திக்கிற இளைஞர்களில் பத்தில் ஏழுபேர் சொல்லுகிற குறை மிகவும் பொதுவானது." என்னை எவரும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் " என்று சொல்கிறார்கள்.பெரும்பாலும் அவர்களிடம் உங்களை எதற்காக பிறர் புரிந்து கொள்ள வேண்டும் ? என்றே திருப்பி கேட்கிறேன்.நீங்கள் யார் யாரை புரிந்து கொண்டிருக்கிறீர்கள் ? இருக்கட்டும் .பிறர் உங்களை புரிந்து கொள்வதற்கு முதலில் நீங்கள் யார் ? ஏதேனும் கறவை மாடுகள் வைத்து விவசாயம் செய்கிறீர்களா ? இல்லை வாத்து மேய்க்கிறீர்களா ? எதற்காக உங்களைப் பிறர் புரிந்து கொள்ள வேண்டும் ? நீங்கள் யார் ? இப்படி கேட்பதால் பெரும்பாலும் அவர்கள் அகம் உடைந்து போகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.பிறகு இப்படி அகம் உடைப்பவனோடு வாழ்நாள் முழுதும் பகையாகவே இருப்பார்கள்.தமிழில் இப்படித்தான் நடக்கிறது.ஏனெனில் இது அகம் உடைகிற இடம் மட்டுமல்ல அகந்தை உடைகிற இடமும் கூட . பெரும்பாலும் இந்த குரல் செயலின்மையின் குரல்.நான் எதுவும் செய்ய மாட்டேன் ஆனால் என்னை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் எப்படி நடக்கும் ? எதையேனும் செய்து கொண்ட

இந்துக்கள் ஒன்று படவேண்டும்

Image
  இந்து வாக்காளர்கள் அரசியல் மயப்பட வேண்டும் இல்லையென்றால் பிற மத அரசியல் சக்திகளின் அன்றாட நகக்கீறல்களில் இருந்து தப்பிக்க இயலாது.அவர்கள் பெரிய திட்டங்களின் அடிப்படையில் இந்து எதிர்ப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த நகக் கீறல்கள் ஒவ்வொன்றும் அன்றாடம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் அருகதை கொண்டவையும் அல்ல.சிறுமையும் ,நாலாந்தரமானஅரசியல் தன்மையும் கொண்டவை. எல்லாம் தோலுரித்து வெளிப்படை ஆகிவிட்டவையும் கூட. ஒட்டு மொத்தத்தில் இந்து எதிர்ப்பு,இந்து சிதைப்பு என்னும் நோக்கங்களின் அடிப்படையின் பின்னின்று இவை செயல்படுகின்றன.மதமாற்றம் ஆதார நோக்கம் இந்து மத எதிர்ப்பை இதுகாறும் சனாதன எதிர்ப்பு என்றும் பிராமண எதிர்ப்பென்றும் பூசி மெழுகி உருட்டிக் கொண்டிருந்தவர்கள் சமீபகாலமாக நேரடியாகவே இந்து எதிர்ப்பில் ஈடுபடுகிறார்கள். இது ஒரு மிஷன். நிறுத்த மாட்டார்கள். எது ஒரு தேசத்தின் தலையாய மதமோ அதனை அழிக்க முற்படுதல் இந்த மிஷனின் உலகளாவிய வேலைத் திட்டம். இந்து எதிர்ப்பு என்பது இன்று தமிழகத்தில் வணிகத்திலும் இடம் பெற்றுள்ளது.முக்கியமாக திரைப்படத் துறையில்.ஊடகங்களிலும் ,அரசியலிலும் மட்டுமே அதன் ஊடுருவல் அ

லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்

Image
  1 ஒரு சிறிய கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார் ஒவ்வொரு சிறியவற்றிலும் இருக்கிறார் இருந்து தலை அசைக்கிறார் சிறிய அளவுக்கு ஒவ்வொரு பெரியவற்றிலும் இருக்கிறார் ஒரு பூவின் அளவுக்கு யானையிலும் அமர்ந்து சவாரி செய்கிறார் அவரிடத்தே பாரபட்சமெல்லாம் ஏதுமில்லை அவரால் முடிந்தது ஒரு சிறிய அளவுக்கு எல்லாவற்றிலும் இருப்பது 2 ஒருவரை நேசிப்பதற்கு நல்லவர் கெட்டவர் என்பதொன்றும் தேவையில்லை ஒருவரை வெறுப்பதற்கும் நல்லவர் கெட்டவர் என்பதொன்றும் தேவையில்லை நாம் சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் வெற்றுச் சும்மா காரணங்கள் எதனால் நேசிக்கிறோம் எதனால் வெறுக்கிறோம் என்பதற்கு எந்த துல்லியமுமில்லை நேசிப்பவருக்குள் நேசிக்கும் சமயத்தில் நேசம் இருக்கிறது அவ்வளவுதான் அதற்கு முன்னும் பின்னும் நேசம் கனிவதற்கு முன்னும் பின்னும் கனிந்த நேரத்தில் சரியாக வந்தவன் காக்கப்படுகிறான் அமையாத நேரத்தில் வந்து அமர்ந்தவன் அல்லல் படுகிறான் 3 ஒரு தர்க்கம் உங்களுக்குள் உருவாகும் போது எவரேனும் ஒருவரிடம் பேசிக் காட்டுகிறீர்கள் அந்த ஒருவர் வேறு யாருமில்லை நீங்கள் தான் உங்கள் முன்னால் நீங்களே நின்று வெளிப்படுவது அது உருவாதபோது ஏற்பட்ட இடர் அப்போதே த

நாடார்களின் முத்தாரம்மை வழிபாடு

Image
நாடார்களின் முத்தாரம்மை வழிபாடு   குமரிமாவட்ட நாடார்கள் முத்தாரம்மன் கோயில்கள் வழியாகவே ஊர் நிர்வாகம் என்கிற அமைப்பைக் கண்டடைந்தார்கள்.ஏகதேசமாக ஊர் நிர்வாகமும் முத்தாரம்மன் வழிபாடும் ஒரே சமயத்தில் நாடார்களிடம் தோற்றம் கொண்டவை.எதுவானாலும் ஊர் கூடி முடிவெடுப்பது என்கிற முறை உருவானது.ஊர் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்படுவது என்று ஆனது.தனிமுடிவுகளுக்கும் கூடி எடுக்கிற முடிவுகளுக்கும் அதிசயிக்கத் தக்கவிதத்தில் எவ்வளவு வேறுபாடுகள் உண்டென்பதை எகதேசம் அனைத்து நாடார்களும் அறிந்து கொண்டார்கள் வேறு மாவட்டங்களில் கடைபிடிக்கப்பட்ட நாட்டாமை முறைகளுக்கும் இதற்கும் தொடர்பில்லை.ஒருவிதத்தில் சொன்னால் நாட்டாமை முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு இது என்று சொல்லலாம்.பணம் ,அதிகாரம் போன்றவற்றின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு, மக்களில் பெரும்பான்மையினரின் விருப்பபடி ஊர் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். தொல்குடிச் சடங்குகள் மட்டுமே ஒரு சமுகத்திற்கு போதுமானதல்ல என்கிற கூட்டுணர்ச்சியின் விளைவாக அடுத்த கட்டத்திற்குள் நாடார்கள் நகர்ந்தார்கள். ஊர் அம்மன் கோயில்கள் உருவாக்கம் அதற்கு வழி செய்தது. தொல்குடிச் சடங்கு

23 கவிதைகளின் தொகுப்பு - லக்ஷ்மி மணிவண்ணன்

Image
1 நான் என்னைப் பற்றி ஒன்றை நினைத்து வைத்திருக்கிறேன் அது அப்பழுக்கு இல்லாதது அது குற்றங்கள் புரியும் தவறுகள் செய்யும் பிழை புரியும் ஆனால் அமிர்தமானது ஒருவரை அழைத்தால் அங்கு நோக்கியே அழைக்கிறேன் ஒருவர் என்னைப் பிரிந்து சென்றால் அங்கிருந்தே பிரிந்து செல்கிறார் 2 ஒருவர் உயிருடன் இந்த முச்சந்தியை பார்த்துக் கொண்டு நிற்கிறார் உண்மையாகவே ஒருவர் உயிருடன் நின்று இந்த முச்சந்தியை காண்கையில் ஒரு வினோதம் நிகழ்கிறது அவர் உயிருடன் நிற்கிற வினோதம் அவர் மட்டுமல்ல இந்த முச்சந்தியும் தோன்றி நிற்கிற வினோதம். எவ்வளவு பொருள் கொடுத்தும் வாங்க இயலாத வினோதம் எத்தகைய அதிகாரத்தாலும் பறிக்க இயலாத வினோதம் அவர் வேறு எதையுமே செய்யவில்லை நின்று பார்க்கக்கூடிய வினோதத்தை நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார் அவ்வளவுதான் தோன்றி நிறைகிறது மாபெரும் வினோதம் 3 எதிரே அமர்ந்திருக்கிறேன் ஒரு கைப்பிடியளவு முருங்கை இலைகள் கண்களில் அசைகின்றன அதுவே இப்போதைய எனது காடு அதன் மூட்டில் குழந்தை சிறுநீர் களிக்கிறாள் அதுவே இப்போதைய என்னுடைய கடல் 4 மேஜை பன்னீர் பாட்டில் நீர் எதிர்பக்கமிருந்து வருகிற விசிறியின் காற்றில் குழந்தை நடனமென அசைகிற